ஆயிரம் கனவுகள் என்னுள் வளர்ந்து
கொண்டிருக்கும் அவனைப் பற்றி
என்று அவன் பிஞ்சு விரலை பிடித்து
என் கன்னங்களில் வைத்து அவன் அழைக்கும்
"அம்மா" வில் மெய் மறந்து ஆனந்தம் கொள்வேனோ
அவன் தந்தையுடன் விளையாடுவதையும்
'அப்பா' என்று அழைப்பதையும் கண்டு
உவகையடைவேனோ என்று ஒவ்வொரு
நாளையும் எண்ணி கொண்டிருக்கிறேன்.