ஆயிரம் கனவுகள் என்னுள் வளர்ந்து
கொண்டிருக்கும் அவனைப் பற்றி
என்று அவன் பிஞ்சு விரலை பிடித்து
என் கன்னங்களில் வைத்து அவன் அழைக்கும்
"அம்மா" வில் மெய் மறந்து ஆனந்தம் கொள்வேனோ
அவன் தந்தையுடன் விளையாடுவதையும்
'அப்பா' என்று அழைப்பதையும் கண்டு
உவகையடைவேனோ என்று ஒவ்வொரு
நாளையும் எண்ணி கொண்டிருக்கிறேன்.
நண்பர்கள்
நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்
நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்
Saturday, July 4, 2015
என்னுள் ஒரு உயிர்
Wednesday, January 30, 2013
Thursday, January 17, 2013
Friday, February 3, 2012
Request
ஃப்ரண்ட்ஸ்,
நானும் கதை எழுதறேன்னு விளையாட்டுக்கு ஆரம்பிச்சேன்........
அதுல முழுமையா ஈடுபட வைச்சது உங்க எல்லோரோட கருத்துகள் தான்.....
அதுக்கு ரொம்பபபபபபபபபபபபபப நன்றி பா......
இதோ முழுசா கதை (முடியாம) முடிச்சுட்டேன்...... நான் என்னென்ன மேம்படுத்திகனும்னு சொல்லுங்க பா .....pls.......
உங்க கருத்துக்காக காத்துகிட்டு இருக்கேன்....
அமைதியான வாசகர்களே...... இப்பவாவது cmt பண்ணுங்க பா.....
நான் என்பதே நீயல்லவா - 25
" இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துகோ ...... அதுகப்பறம் நான் சொன்ன மாதிரியே ..... உன் கண்ணுல கண்டிப்பா படமாட்டேன்........ உன் இஷ்டபடி உன் வாழ்கைய அமைச்சுகோ........" என்று விட்டு அவள் முகம் பார்த்தான் சரண்.
பொதுவாகவே உத்ராவிற்கு லேசில் கோபம் வராது, பேசுவர்களின் நிலையில் தன்னை வைத்து பார்த்து சமாதானம் செய்துகொள்வாள். ஆனால் , ஒரு விஷயத்திற்கு கோபம் வந்தது என்றால் பின் சமாதானம் செய்வது கடினம். இப்போதும் அப்படியே........
அவன் சொல்லி முடிக்கவும் அவளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ?....... வேகமாய் அவனை நெருங்கியவள், இரண்டு கைகளாளும் அவன் சட்டையை பிடித்து உலுக்கி
"என்ன டா நினைச்சுகிட்டு இருக்க? பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிகலாம்னு சொல்லுவ..... சரிங்கனும்.... அப்பறம் சந்தேகப்பட்டு பேசுவ ..... சகிச்சுகனும்....... அப்பறம் சாரி கேட்ப...... லவ் பண்ணறேன் சொல்லுவ.. அதுக்கும் சரி தெரியாம செஞ்சுட்ட யோசிக்கறப்ப ........ கல்யாணத்த நிறுத்திடறேன்னு சொல்லிட்டு போய்டுவ....... அதையும் சரினு ஒத்துகனும்....... அப்பறம் வந்து தாலிகட்டி கூட்டிட்டு வருவ......... உனக்கு கழுத்தநீட்டிட்டு உங்கூட வரனும்.......... இப்போ கொஞ்சநாள் இருந்துட்டு உன் வழிய பார்த்துட்டு போனு சொன்னா........ சரி னு பெட்டிய தூக்கிட்டு போய்டனுமா?.........." கோபம் மிகுதியாக அவனது கன்னத்தில் ஒரு அறை விட்டவள்( இது நீங்க கேட்டதுக்காக பா....)
"எப்பவாவது என்ன பேசவிட்டயா?......... நீயே பேசி ..... நீயே முடிவு எடுத்துட்டு அதுகான தண்டனைய மட்டும் எனக்கு தர............. என்னய சொல்லனும் ....... உன்ன போய் உருகி... உருகி ... லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் இல்ல ........ இதுவும் வேனும் இன்னமும் வேணும்......" சட்டையை விடுவித்தவள் கண்களில் நீர் வழிய தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.சிறிது நேரம் கண்ணீர்விட்டவள்
" இப்ப சொன்ன பாரு என் கண்ணுல பட மாட்டேன்னு ..... அத செய் ..... இனி நான் உன்ன பார்க்க கூடாது...... பார்த்தேன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் போடா போ........" என்று கத்திவிட்டு அறையைவிட்டு வெளியேறினாள்.
சரணுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.... , அவள் சட்டையை பிடிக்கும் போது அதிர்ச்சியில் நின்றவன் அவள் பேச பேச அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவனது காதுகள் தன் வேலையை செவ்வன செய்தாலும், மூளை அதை ஏற்க தாமதமானது. அவள் சென்று வெகு நேரத்திற்கு பிறகு தான் அவள் அடித்ததே உரைத்தது அவனுக்கு, அவள் பேசியதின் அர்த்தம் புரிய, துள்ளிகுதித்தான் அவளை தேடி கண்கள் அலைந்தது. அறை விட்டு வெளியே வந்து வீடெங்கும் அவளை தேடியும் அவளை காணவில்லை. ஒரு யூகத்தில் மாடிக்கு சென்றான், அங்கு அவள் இருட்டை வெறித்தபடி அழுது கொண்டிருந்தாள். அருகில் சென்றவன் தோளைப்பற்றி திருப்பினான். அவனது கைகளை தட்டிவிட்டாள், அவன் விடாது திருப்பி, அவளது முகத்தை நிமிர்த்தி கண்களை துடைத்துவிட்டு
" சாரி மா........... சாரி.........." என கோபத்தோடு முகத்தை திருப்பிகொண்டாள்.
மறுபடியும் தன்பக்கம் அவளை திருப்பியவன் இறுக அணைத்துகொண்டான். முதலில் திமிறியவள் பின் அழுகையோடு அவனிடம் ஒன்றினாள். மனம் லேசாகும் வரை அழுதுமுடித்தவள் அவனிடமிருந்து விலக, சரண் இன்னும் இறுக்கிகொண்டான். சிறிது நேரம் கழித்து விடுவித்தாலும் தன் கையணைப்பிலேயே நிறுத்திகொண்டவன், அவள் முகத்தை நிமிர்த்தி கன்னத்தில் இதழ்பதித்தான், அவள் முகம் ரத்த சிவப்பிற்கு மாற , மீண்டும் மீண்டும் முத்தமிட்டு அவளது வெட்கத்தை ரசித்தான்.
"போதும்........... போதும்...... எனக்கு வலிக்குது இல்ல...." என்று சினுங்கிய உத்ராவிடம்
" இதுக்கே இப்படி சொன்னா எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்குல்ல........" என்று கண்ணடிக்க அவள் அவன் மார்பில் செல்லமாக குத்தினாள்.
" ஆ........... " உண்மையாக வலிப்பது போல பாவனை செய்ய, பதறியவள் தடவிட்டு கொண்டே
"வலிக்குதா........" என
"இங்க இல்ல இங்க......" என்று கன்னத்தை காண்பித்தான். முறைத்துகொண்டே
"நீங்க பேசினதுக்கு அறையோட விட்டேனேனு சந்தோஷபடுங்க......." என
" சாரி டா........ என்னவோ பேசி கஷ்டபடுத்திடேன் இல்ல........ "
"................."
" நீ கஷ்டபடுறயோனு நினைச்சு தான் அப்படி சொன்னேன்......"
" கஷ்டபடுறவ தான் கல்யாணம் நின்னுபோகாமா இருக்க எல்லாத்தையும் செய்வாளா?....." அவளை ஆச்சரியத்தோடு பார்த்தவன்
"ஏய் உண்மையாவா?...... என்ன பண்ண சொல்லு...."
"ம்ஹ்ம் நீங்க முதல்ல ஏன் அப்படி நினைச்சிங்க அத சொல்லுங்க......"
" நீ அன்னைக்கு என்கிட்ட உங்கள வாழ்க்கை முழுக்க சகிச்சுக்க முடியாதுனு சொன்னப்ப எவ்வளவு வலிச்சது தெரியுமா?...... இருந்தாலும் உன் விருப்பத்துக்காக தான் கல்யாணத்த நிறுத்தறேன்னு சொன்னேன்.... சொல்லிட்டு வந்துட்டனே தவிர என்ன பண்ணறது? எப்படி நிறுத்தறதுனு ஒன்னுமே தெரியல......... அப்ப பார்த்து ரிஷி வந்தானா......... அவன்கிட்ட எனக்கு இந்த கல்யாணாத்துல இஷ்டம் இல்லனு சொன்னேன், காரணம் கேட்டப்போ எதுவும் சொல்லலை, ஒன்னுமே பேசாம போய்ட்டான். அன்னைக்கு நைட் என்ன கூப்பிடு, நீ உத்ராவ கல்யாணம் பண்ணிகலனா, நானும் விஜிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் இது தான் என் முடிவுனு சொல்லி போனை வைச்சுட்டான். எனக்கு என்ன செய்யறதுனே தெரியல, விஜி காக கல்யாணம் பண்ணிதான ஆகனும்னு நினைச்சேன். அதுமட்டுமில்ல எனக்கும் உன்ன விட்டு கொடுக்க மனசு வரல, அதுக்கு ஒரு காரணம் கிடைச்சதும் அப்படியே பிடிச்சுகிட்டேன்.ஆனாலும் உனக்கு பிடிக்காதத செய்றனேன்னு உறுத்திகிட்டே இருந்தது. அதுனால நீ ரொம்ப கஷ்ட படுறயோனு தோணிகிட்டே இருந்துதது. கார்ல வரப்ப அழுத இல்ல அப்போ தான் தெரிஞ்சுகிட்டேன் நீ அழுதா எனக்கு எவ்வளவு வலிக்கும்னு, அப்போ முடிவு பண்ணேன் உனக்கு பிடிச்ச மாதிரி உன்ன வாழவைக்கனும்னு, இப்போ கூட நான் பீச்ல தான் இருந்தேன். உன்கிட்ட பேசறதுக்கு என்ன தயார்படுத்திகிட்டு இருந்தேன். ஆனா இப்போ புரியுது இதெல்லாம் தேவையில்லாததுனு......"
"இப்பவாவது புரிஞ்சுதே...... அன்னைக்கு நான் உங்கள சகிச்சுக்க முடியாதுனா சொன்னேன் ...... நீங்க சொல்லுறத சகிச்சுக்க முடியாதுனு தான சொன்னேன்.. நீங்களா ஏதோ நினைச்சுகிட்டா நான் என்ன செய்யட்டும்........?, அன்னைக்கு நீங்க பேசிட்டு போனதும் நான் ரொம்பவே ஷாக் ஆகிட்டேன்....என்ன பிடிக்காம தான் கல்யாணாத்த நிறுத்தறீங்களோனு தோனுச்சு, ஆனா உங்க கண்ணுல தெரிஞ்ச வலி என்ன குழப்பிடுச்சு. விஜி தான் வந்து என்ன என்ன னு கேட்டு துளைச்சுட்டா அப்பறம் எல்லாம் சொன்னேன்.... அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா உண்மையாவே சரண் உன்ன லவ் பண்ணறான் டி ஏதோ கிறுக்குதனமா பண்ணிட்டான் னு, என்ன டி அண்ணன்னு சப்போர்ட் பண்ணறயானு கேட்டேன். இல்ல டி இத படிச்சா உனக்கே தெரியும்னு சொல்லி உங்க டைரிய கொடுத்துட்டு போய்ட்டா..., படிச்சப்ப தான் ஐயா, என்ன எவ்வளவு லவ் பண்ணிங்கனு தெரிஞ்சுது. அப்பறம் சாய்ந்தரம் ரிஷி போன் பண்ணான், சரண் கூட என்ன டி பிரச்சனைனு கேட்டான். ஏன் கேட்டதுக்கு நீங்க கல்யாணத்த நிறுத்த போறேன்னு சொன்னதா சொன்னான், நான் சும்மா சண்டைடா நான் சொல்லுற மாதிரி சொல்லுடா நான் சமாதான படுத்திகறேன்னு சொன்னேன், அவனும் அதே மாதிரி செஞ்சுட்டான். நானும் எல்லாம் சரியான மாதிரி அவன்கிட்ட காட்டிகிட்டேன். விஜிக்கு மட்டும் எல்லாம் தெரியும்.நாளைக்கு போன் பண்ணுவா பாருங்க......."
" எனக்கு தான் எதுவுமே தெரியாம முட்டாளா இருந்திருக்கேன்......."
"ம்ம்ம் புரிஞ்சுக்க மட்டுமில்ல , கண்ணு கூட தெரியாம இருந்திங்க.."
" என்னது........"
"பின்ன என்ன எத்தன தடவ உங்க காதலோட பார்த்திருப்பேன், ஒரு தடவயாவது என் கண்ண பார்தியா டா நீ"
" என்ன மரியாதயெல்லாம் தூள்பறக்குது......"
"ஆமா....... உனக்கு மரியாத வேற குடுக்கனுமா..... அதெல்லாம் முடியாது போடா...."
"என்ன டா வா உன்ன........" என்று அவளை தூக்கிகொண்டு தங்களது அறைக்கு சென்றான்.
நீ என் வானம்,நீ என் காற்று,நீ என் மூச்சு
இப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன் - ஏனெனில்
நான் என்பதே நீயல்லவா.
(இனி நாம டிஸ்டர்ப் பண்ணா அடிக்க வந்திடுவாங்க..... வாங்க ஒடிடுவோம்....)
- சுபம் -
பொதுவாகவே உத்ராவிற்கு லேசில் கோபம் வராது, பேசுவர்களின் நிலையில் தன்னை வைத்து பார்த்து சமாதானம் செய்துகொள்வாள். ஆனால் , ஒரு விஷயத்திற்கு கோபம் வந்தது என்றால் பின் சமாதானம் செய்வது கடினம். இப்போதும் அப்படியே........
அவன் சொல்லி முடிக்கவும் அவளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ?....... வேகமாய் அவனை நெருங்கியவள், இரண்டு கைகளாளும் அவன் சட்டையை பிடித்து உலுக்கி
"என்ன டா நினைச்சுகிட்டு இருக்க? பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிகலாம்னு சொல்லுவ..... சரிங்கனும்.... அப்பறம் சந்தேகப்பட்டு பேசுவ ..... சகிச்சுகனும்....... அப்பறம் சாரி கேட்ப...... லவ் பண்ணறேன் சொல்லுவ.. அதுக்கும் சரி தெரியாம செஞ்சுட்ட யோசிக்கறப்ப ........ கல்யாணத்த நிறுத்திடறேன்னு சொல்லிட்டு போய்டுவ....... அதையும் சரினு ஒத்துகனும்....... அப்பறம் வந்து தாலிகட்டி கூட்டிட்டு வருவ......... உனக்கு கழுத்தநீட்டிட்டு உங்கூட வரனும்.......... இப்போ கொஞ்சநாள் இருந்துட்டு உன் வழிய பார்த்துட்டு போனு சொன்னா........ சரி னு பெட்டிய தூக்கிட்டு போய்டனுமா?.........." கோபம் மிகுதியாக அவனது கன்னத்தில் ஒரு அறை விட்டவள்( இது நீங்க கேட்டதுக்காக பா....)
"எப்பவாவது என்ன பேசவிட்டயா?......... நீயே பேசி ..... நீயே முடிவு எடுத்துட்டு அதுகான தண்டனைய மட்டும் எனக்கு தர............. என்னய சொல்லனும் ....... உன்ன போய் உருகி... உருகி ... லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் இல்ல ........ இதுவும் வேனும் இன்னமும் வேணும்......" சட்டையை விடுவித்தவள் கண்களில் நீர் வழிய தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.சிறிது நேரம் கண்ணீர்விட்டவள்
" இப்ப சொன்ன பாரு என் கண்ணுல பட மாட்டேன்னு ..... அத செய் ..... இனி நான் உன்ன பார்க்க கூடாது...... பார்த்தேன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் போடா போ........" என்று கத்திவிட்டு அறையைவிட்டு வெளியேறினாள்.
சரணுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.... , அவள் சட்டையை பிடிக்கும் போது அதிர்ச்சியில் நின்றவன் அவள் பேச பேச அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவனது காதுகள் தன் வேலையை செவ்வன செய்தாலும், மூளை அதை ஏற்க தாமதமானது. அவள் சென்று வெகு நேரத்திற்கு பிறகு தான் அவள் அடித்ததே உரைத்தது அவனுக்கு, அவள் பேசியதின் அர்த்தம் புரிய, துள்ளிகுதித்தான் அவளை தேடி கண்கள் அலைந்தது. அறை விட்டு வெளியே வந்து வீடெங்கும் அவளை தேடியும் அவளை காணவில்லை. ஒரு யூகத்தில் மாடிக்கு சென்றான், அங்கு அவள் இருட்டை வெறித்தபடி அழுது கொண்டிருந்தாள். அருகில் சென்றவன் தோளைப்பற்றி திருப்பினான். அவனது கைகளை தட்டிவிட்டாள், அவன் விடாது திருப்பி, அவளது முகத்தை நிமிர்த்தி கண்களை துடைத்துவிட்டு
" சாரி மா........... சாரி.........." என கோபத்தோடு முகத்தை திருப்பிகொண்டாள்.
மறுபடியும் தன்பக்கம் அவளை திருப்பியவன் இறுக அணைத்துகொண்டான். முதலில் திமிறியவள் பின் அழுகையோடு அவனிடம் ஒன்றினாள். மனம் லேசாகும் வரை அழுதுமுடித்தவள் அவனிடமிருந்து விலக, சரண் இன்னும் இறுக்கிகொண்டான். சிறிது நேரம் கழித்து விடுவித்தாலும் தன் கையணைப்பிலேயே நிறுத்திகொண்டவன், அவள் முகத்தை நிமிர்த்தி கன்னத்தில் இதழ்பதித்தான், அவள் முகம் ரத்த சிவப்பிற்கு மாற , மீண்டும் மீண்டும் முத்தமிட்டு அவளது வெட்கத்தை ரசித்தான்.
"போதும்........... போதும்...... எனக்கு வலிக்குது இல்ல...." என்று சினுங்கிய உத்ராவிடம்
" இதுக்கே இப்படி சொன்னா எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்குல்ல........" என்று கண்ணடிக்க அவள் அவன் மார்பில் செல்லமாக குத்தினாள்.
" ஆ........... " உண்மையாக வலிப்பது போல பாவனை செய்ய, பதறியவள் தடவிட்டு கொண்டே
"வலிக்குதா........" என
"இங்க இல்ல இங்க......" என்று கன்னத்தை காண்பித்தான். முறைத்துகொண்டே
"நீங்க பேசினதுக்கு அறையோட விட்டேனேனு சந்தோஷபடுங்க......." என
" சாரி டா........ என்னவோ பேசி கஷ்டபடுத்திடேன் இல்ல........ "
"................."
" நீ கஷ்டபடுறயோனு நினைச்சு தான் அப்படி சொன்னேன்......"
" கஷ்டபடுறவ தான் கல்யாணம் நின்னுபோகாமா இருக்க எல்லாத்தையும் செய்வாளா?....." அவளை ஆச்சரியத்தோடு பார்த்தவன்
"ஏய் உண்மையாவா?...... என்ன பண்ண சொல்லு...."
"ம்ஹ்ம் நீங்க முதல்ல ஏன் அப்படி நினைச்சிங்க அத சொல்லுங்க......"
" நீ அன்னைக்கு என்கிட்ட உங்கள வாழ்க்கை முழுக்க சகிச்சுக்க முடியாதுனு சொன்னப்ப எவ்வளவு வலிச்சது தெரியுமா?...... இருந்தாலும் உன் விருப்பத்துக்காக தான் கல்யாணத்த நிறுத்தறேன்னு சொன்னேன்.... சொல்லிட்டு வந்துட்டனே தவிர என்ன பண்ணறது? எப்படி நிறுத்தறதுனு ஒன்னுமே தெரியல......... அப்ப பார்த்து ரிஷி வந்தானா......... அவன்கிட்ட எனக்கு இந்த கல்யாணாத்துல இஷ்டம் இல்லனு சொன்னேன், காரணம் கேட்டப்போ எதுவும் சொல்லலை, ஒன்னுமே பேசாம போய்ட்டான். அன்னைக்கு நைட் என்ன கூப்பிடு, நீ உத்ராவ கல்யாணம் பண்ணிகலனா, நானும் விஜிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் இது தான் என் முடிவுனு சொல்லி போனை வைச்சுட்டான். எனக்கு என்ன செய்யறதுனே தெரியல, விஜி காக கல்யாணம் பண்ணிதான ஆகனும்னு நினைச்சேன். அதுமட்டுமில்ல எனக்கும் உன்ன விட்டு கொடுக்க மனசு வரல, அதுக்கு ஒரு காரணம் கிடைச்சதும் அப்படியே பிடிச்சுகிட்டேன்.ஆனாலும் உனக்கு பிடிக்காதத செய்றனேன்னு உறுத்திகிட்டே இருந்தது. அதுனால நீ ரொம்ப கஷ்ட படுறயோனு தோணிகிட்டே இருந்துதது. கார்ல வரப்ப அழுத இல்ல அப்போ தான் தெரிஞ்சுகிட்டேன் நீ அழுதா எனக்கு எவ்வளவு வலிக்கும்னு, அப்போ முடிவு பண்ணேன் உனக்கு பிடிச்ச மாதிரி உன்ன வாழவைக்கனும்னு, இப்போ கூட நான் பீச்ல தான் இருந்தேன். உன்கிட்ட பேசறதுக்கு என்ன தயார்படுத்திகிட்டு இருந்தேன். ஆனா இப்போ புரியுது இதெல்லாம் தேவையில்லாததுனு......"
"இப்பவாவது புரிஞ்சுதே...... அன்னைக்கு நான் உங்கள சகிச்சுக்க முடியாதுனா சொன்னேன் ...... நீங்க சொல்லுறத சகிச்சுக்க முடியாதுனு தான சொன்னேன்.. நீங்களா ஏதோ நினைச்சுகிட்டா நான் என்ன செய்யட்டும்........?, அன்னைக்கு நீங்க பேசிட்டு போனதும் நான் ரொம்பவே ஷாக் ஆகிட்டேன்....என்ன பிடிக்காம தான் கல்யாணாத்த நிறுத்தறீங்களோனு தோனுச்சு, ஆனா உங்க கண்ணுல தெரிஞ்ச வலி என்ன குழப்பிடுச்சு. விஜி தான் வந்து என்ன என்ன னு கேட்டு துளைச்சுட்டா அப்பறம் எல்லாம் சொன்னேன்.... அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா உண்மையாவே சரண் உன்ன லவ் பண்ணறான் டி ஏதோ கிறுக்குதனமா பண்ணிட்டான் னு, என்ன டி அண்ணன்னு சப்போர்ட் பண்ணறயானு கேட்டேன். இல்ல டி இத படிச்சா உனக்கே தெரியும்னு சொல்லி உங்க டைரிய கொடுத்துட்டு போய்ட்டா..., படிச்சப்ப தான் ஐயா, என்ன எவ்வளவு லவ் பண்ணிங்கனு தெரிஞ்சுது. அப்பறம் சாய்ந்தரம் ரிஷி போன் பண்ணான், சரண் கூட என்ன டி பிரச்சனைனு கேட்டான். ஏன் கேட்டதுக்கு நீங்க கல்யாணத்த நிறுத்த போறேன்னு சொன்னதா சொன்னான், நான் சும்மா சண்டைடா நான் சொல்லுற மாதிரி சொல்லுடா நான் சமாதான படுத்திகறேன்னு சொன்னேன், அவனும் அதே மாதிரி செஞ்சுட்டான். நானும் எல்லாம் சரியான மாதிரி அவன்கிட்ட காட்டிகிட்டேன். விஜிக்கு மட்டும் எல்லாம் தெரியும்.நாளைக்கு போன் பண்ணுவா பாருங்க......."
" எனக்கு தான் எதுவுமே தெரியாம முட்டாளா இருந்திருக்கேன்......."
"ம்ம்ம் புரிஞ்சுக்க மட்டுமில்ல , கண்ணு கூட தெரியாம இருந்திங்க.."
" என்னது........"
"பின்ன என்ன எத்தன தடவ உங்க காதலோட பார்த்திருப்பேன், ஒரு தடவயாவது என் கண்ண பார்தியா டா நீ"
" என்ன மரியாதயெல்லாம் தூள்பறக்குது......"
"ஆமா....... உனக்கு மரியாத வேற குடுக்கனுமா..... அதெல்லாம் முடியாது போடா...."
"என்ன டா வா உன்ன........" என்று அவளை தூக்கிகொண்டு தங்களது அறைக்கு சென்றான்.
நீ என் வானம்,நீ என் காற்று,நீ என் மூச்சு
இப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன் - ஏனெனில்
நான் என்பதே நீயல்லவா.
(இனி நாம டிஸ்டர்ப் பண்ணா அடிக்க வந்திடுவாங்க..... வாங்க ஒடிடுவோம்....)
- சுபம் -
நான் என்பதே நீயல்லவா - 24
இரகசியத்தை சொல்ல படபடக்கும் இதயத்தோடு எத்தனையோ கனவுகளையும் சுமந்தபடி உத்ரா சரணிருக்கும் அறைக்குள் கால் எடுத்து வைத்தாள். அங்கு அவன் அவளிடம் ஒருவார்த்தைகூட பேசவில்லை பேசுவது என்ன அவளை பார்க்க கூட இல்லை அமைதியாக அமர்ந்திருந்தான். சிறிது நேரம் நின்றிருந்தவள் தானாகவே பேச்சை ஆரம்பித்தாள்
"சரண்........"
"உத்ரா இப்போ எதும் என்ன கேட்காத , என்னால பதில் சொல்ல முடியாது.........."
"இல்ல சரண்....... அது......."
"ப்ளிஸ்........." அவனை இரண்டு நிமிடம் உற்றுநோக்கியவள் அமைதியாய் கீழே படுத்துக்கொண்டாள்.
அடுத்த நாள் காலையிலையே இருவரும் சென்னை கிளம்பினர். சரஸ்வதி,கீர்த்தி,விஜி முவரும் அழுதபடியே வழியனுப்ப இருவருமாய் காரில் புறப்பட்டனர். பெற்றவர்கள் அனைவரும் அன்றிரவே திருப்பதி செல்வதால் ராஜாத்தியும், பெருமாளும் இவர்களுடன் வரவில்லை. இவர்கள் மட்டும் தனியாக பயணித்தனர். புறப்படும் போது வராத அழுகை, அவர்கள் தலை மறைந்தவுடன் வந்தது உத்ராவிற்கு. சரண் தான் காரை ஓட்டிகொண்டு வந்தான்.
உத்ரா கண்கலங்கியபடி வர , அதை பார்த்தும் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாய் சிறிது தூரம் வந்த சரண், காரை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டு அவளை பார்த்தான். உத்ரா இவனை பார்க்கவில்லை அழுகையை கட்டுபடுத்த முயன்று கொண்டிருந்தாள், என்ன நினைத்தானோ அவளை தன் தோளில் சாய்த்துகொண்டான். அதற்கு மேல் தாங்காது என்பது போல அழுகை வெடிக்க அவனது சட்டையை ஈரமாக்கினாள். அவள் அழுவதை பொறுக்காதவன்
" உத்தி குட்டி எதுக்கு இப்படி அழற....... வேண்னும்னா திரும்பி போலாமா? ......... அழாதீங்க டா." என்று குழந்தைக்கு சொல்வதுபோல் தலையை தடவி சமாதான படுத்தினான். அவனது அருகாமையோ அல்லது சமாதான பேச்சோ அவளது அழுகை மெல்ல குறைந்தது.அதற்கு மேல் தன்னை கட்டுபடுத்த இயலதாவன் அவளை விலக்கிவிட்டு, காரை எடுத்தான். அவனது செய்கையில் வேறுபாட்டை உணர்ந்தவள், 'என்னாயிற்று திடீரென்று?' என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள். அவர்கள் சென்னைக்கு வரும் போது மதியவேளையாகியிருந்தது, உத்ராவின் கண்களில் பசியை பார்த்தவன் நல்ல உணவகத்திற்கு வண்டியை விட்டான். தன் மனதறிந்து நடந்தவனை காண உள்ளம் நிறைந்தது உத்ராவிற்கு. இருவருக்கும் தேவையானதை ஆர்டர் செய்து வரவழைத்தவன் , அவள் நன்றாக உண்ணும்படி பார்த்துகொண்டான்.
சாப்பிட்டு முடித்ததும் உத்ராவை வீட்டில் கொண்டுபோய்விட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டான். முதலில் பணகளைப்பு தீர குளித்துமுடித்தவள், பின் அவனது அறையில் தனது பொருட்களை அடுக்கி வைத்தாள். வீட்டை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தியவள், இரவுக்கு என்ன செய்யலாம்? என்ன இருக்கிறது? என்று பார்த்துவிட்டு சாப்பாத்தி செய்து குருமா வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். அதன்படி சப்பாத்தி செய்து மணக்க மணக்க குருமாவும் வைத்தாள். அவள் நினைவெல்லாம் சரண் எப்படி இதை ரசித்து சாப்பிடுவான் என்ற கற்பனையில் தான் இருந்தது. அவன் இவள் தலையில் இடியை இறக்க போவது தெரியாமல்.
இருட்டிய பின் வீடுவந்தவன் அவளிடம் பேசாமல் ஒருவித இறுக்கத்துடன் இருந்தான். குளித்துவிட்டு வந்தவனுக்கு சூடாய் தான் செய்ததை ஆசையுடன் பரிமாறியவள், ஆவலாய் அவன் முகம் பார்த்தபடி அமர்ந்தாள். இவள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்துவிட்டு அவளையும் சாப்பிடுமாறு கூறி அவன் பரிமாறினான். இருவருமாய் சாப்பிட்டுவிட்டு எழுந்தனர். அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு சுத்தபடுத்திவிட்டு வந்தாள் உத்ரா. அவளுக்காக காத்திருந்தான் சரண்.உத்ராவிற்கும் புரிந்தது அவன் தனக்காக தான் காத்திருக்கிறான் என்று. அமைதியாய் அவன் முன் நின்றாள். சிறிது நேர அமைதிக்கு பின்
" உத்ரா மன்னிச்சுகோ என்னால இந்த கல்யாணத்த நிறுத்த முடியல....... உனக்கு .... இந்த கல்யாணத்துல சம்மதமில்லனு எனக்கு தெரியும் ........" ஏதோ கோபத்தோடு சொல்லவந்தவளை கைகாட்டி நிறுத்தியவன்
" இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துகோ ...... அதுகப்பறம் நான் சொன்ன மாதிரியே ..... உன் கண்ணுல கண்டிப்பா படமாட்டேன்........ உன் இஷ்டபடி உன் வாழ்கைய அமைச்சுகோ........" என்று விட்டு அவள் முகம் பார்த்தான்.
"சரண்........"
"உத்ரா இப்போ எதும் என்ன கேட்காத , என்னால பதில் சொல்ல முடியாது.........."
"இல்ல சரண்....... அது......."
"ப்ளிஸ்........." அவனை இரண்டு நிமிடம் உற்றுநோக்கியவள் அமைதியாய் கீழே படுத்துக்கொண்டாள்.
அடுத்த நாள் காலையிலையே இருவரும் சென்னை கிளம்பினர். சரஸ்வதி,கீர்த்தி,விஜி முவரும் அழுதபடியே வழியனுப்ப இருவருமாய் காரில் புறப்பட்டனர். பெற்றவர்கள் அனைவரும் அன்றிரவே திருப்பதி செல்வதால் ராஜாத்தியும், பெருமாளும் இவர்களுடன் வரவில்லை. இவர்கள் மட்டும் தனியாக பயணித்தனர். புறப்படும் போது வராத அழுகை, அவர்கள் தலை மறைந்தவுடன் வந்தது உத்ராவிற்கு. சரண் தான் காரை ஓட்டிகொண்டு வந்தான்.
உத்ரா கண்கலங்கியபடி வர , அதை பார்த்தும் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாய் சிறிது தூரம் வந்த சரண், காரை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டு அவளை பார்த்தான். உத்ரா இவனை பார்க்கவில்லை அழுகையை கட்டுபடுத்த முயன்று கொண்டிருந்தாள், என்ன நினைத்தானோ அவளை தன் தோளில் சாய்த்துகொண்டான். அதற்கு மேல் தாங்காது என்பது போல அழுகை வெடிக்க அவனது சட்டையை ஈரமாக்கினாள். அவள் அழுவதை பொறுக்காதவன்
" உத்தி குட்டி எதுக்கு இப்படி அழற....... வேண்னும்னா திரும்பி போலாமா? ......... அழாதீங்க டா." என்று குழந்தைக்கு சொல்வதுபோல் தலையை தடவி சமாதான படுத்தினான். அவனது அருகாமையோ அல்லது சமாதான பேச்சோ அவளது அழுகை மெல்ல குறைந்தது.அதற்கு மேல் தன்னை கட்டுபடுத்த இயலதாவன் அவளை விலக்கிவிட்டு, காரை எடுத்தான். அவனது செய்கையில் வேறுபாட்டை உணர்ந்தவள், 'என்னாயிற்று திடீரென்று?' என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள். அவர்கள் சென்னைக்கு வரும் போது மதியவேளையாகியிருந்தது, உத்ராவின் கண்களில் பசியை பார்த்தவன் நல்ல உணவகத்திற்கு வண்டியை விட்டான். தன் மனதறிந்து நடந்தவனை காண உள்ளம் நிறைந்தது உத்ராவிற்கு. இருவருக்கும் தேவையானதை ஆர்டர் செய்து வரவழைத்தவன் , அவள் நன்றாக உண்ணும்படி பார்த்துகொண்டான்.
சாப்பிட்டு முடித்ததும் உத்ராவை வீட்டில் கொண்டுபோய்விட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டான். முதலில் பணகளைப்பு தீர குளித்துமுடித்தவள், பின் அவனது அறையில் தனது பொருட்களை அடுக்கி வைத்தாள். வீட்டை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தியவள், இரவுக்கு என்ன செய்யலாம்? என்ன இருக்கிறது? என்று பார்த்துவிட்டு சாப்பாத்தி செய்து குருமா வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். அதன்படி சப்பாத்தி செய்து மணக்க மணக்க குருமாவும் வைத்தாள். அவள் நினைவெல்லாம் சரண் எப்படி இதை ரசித்து சாப்பிடுவான் என்ற கற்பனையில் தான் இருந்தது. அவன் இவள் தலையில் இடியை இறக்க போவது தெரியாமல்.
இருட்டிய பின் வீடுவந்தவன் அவளிடம் பேசாமல் ஒருவித இறுக்கத்துடன் இருந்தான். குளித்துவிட்டு வந்தவனுக்கு சூடாய் தான் செய்ததை ஆசையுடன் பரிமாறியவள், ஆவலாய் அவன் முகம் பார்த்தபடி அமர்ந்தாள். இவள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்துவிட்டு அவளையும் சாப்பிடுமாறு கூறி அவன் பரிமாறினான். இருவருமாய் சாப்பிட்டுவிட்டு எழுந்தனர். அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு சுத்தபடுத்திவிட்டு வந்தாள் உத்ரா. அவளுக்காக காத்திருந்தான் சரண்.உத்ராவிற்கும் புரிந்தது அவன் தனக்காக தான் காத்திருக்கிறான் என்று. அமைதியாய் அவன் முன் நின்றாள். சிறிது நேர அமைதிக்கு பின்
" உத்ரா மன்னிச்சுகோ என்னால இந்த கல்யாணத்த நிறுத்த முடியல....... உனக்கு .... இந்த கல்யாணத்துல சம்மதமில்லனு எனக்கு தெரியும் ........" ஏதோ கோபத்தோடு சொல்லவந்தவளை கைகாட்டி நிறுத்தியவன்
" இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துகோ ...... அதுகப்பறம் நான் சொன்ன மாதிரியே ..... உன் கண்ணுல கண்டிப்பா படமாட்டேன்........ உன் இஷ்டபடி உன் வாழ்கைய அமைச்சுகோ........" என்று விட்டு அவள் முகம் பார்த்தான்.
Subscribe to:
Comments (Atom)


