நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Thursday, September 30, 2010

நட்பு

எங்கோ பிறந்தோம்!
எங்கோ வளர்ந்தோம்!
அனைவரும் இங்கே!
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால
சிந்தித்துக கொண்டோம்!

முகங்களைப் பற்றி
யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து
நேசித்ததுமில்லை!

எதிர் பார்ப்புகள்
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!

அவரவர் கருத்துக்களை
இடம் மாற்றிக்க கொள்வோம்!
பாரட்டுக்களை
பரிமாறிக்க கொள்வோம் !

சின்ன‌ சின்ன‌
ச‌ண்டைக‌ள் இடுவோம்
சீக்கிர‌த்திலேயே
ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!

கவலைகளை
கிள்ளி அறிவோம்!
இலட்சியஙகளை
சொல்லி மகிழ்வோம்!

உழைப்பை பெருக்க
உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க
நம்பிக்கை தருவோம்!

நன்மைகள் வளர
முயற்சிப்போம்!
நட்பால் உயர்ந்து
சாதிப்போம்!

Monday, September 27, 2010

சூரிய சக்தி உளவு விமானம்

ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் வகையில் சூரியசக்தி உளவு விமானம் ஒன்றை போயிங் நிறுவனம் தயார் செய்துள்ளது.
சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம் தயாரிக்க போயிங் நிறுவனத்திடம் அமெரிக்க ராணுவம் ஆர்டர் கொடுத்தது.

சோலார் ஈகிள் என்ற பெயரில் உளவு விமானத்தை தயாரித்துள்ள போயிங் விமானம் அதை பரிசோதித்து வருகிறது. இந்த விமானம் நிற்காமல் விண்ணில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பறக்குமாம்.

இந்த விமானத்தின் இறக்கையில் உள்ள சோலார் தகடுகள், பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும். இதன் மூலம் விமானத்தின் எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் புரொப்பலர்கள் இயங்கும். வானில் மிக உயரத்தில் தொடர்ச்சியாக பறந்து, படங்கள் மற்றும் உளவுத் தகவலை தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு இந்த விமானம் அனுப்பிக் கொண்டிருக்கும்.

முதல் முறையாக சோதனை ஓட்டத்துக்கு விடப்படும் விமானம், 30 நாள் நிற்காமல் பறக்கவுள்ளது. இந்த சோலார் ஈகிள் விமானம் 2014ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது

செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம்


இனி நாம் கொஞ்சம் அறிவியலும் தெரிந்து கொள்வோமா?


செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக் கூடம் உருவாக்கப்பட்டு செடிகள் பராமரிக்கப்பட்டதில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள தகவல்களின் விவரம்: பூமியில் இருந்து செடிகளை இரு கிரகங்களுக்கும் எடுத்துச் சென்று வளர்க்க முடியும். இதன் முதல் கட்டமாக உருளை, பட்டாணி, தக்காளி, மிளகு உள்ளிட்ட சில காய்கறிகளை உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவில் இவற்றை புதைத்து வைத்தால் போதும் செடிகள் துளிர்க்கத் துவங்கிவிடும். அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. விதை மற்றும் குழல் வடிவ தாவரங்களின் கிளைகளில் உள்ள ஈரப்பதமே அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும். 30 நாட்களில் காய்த்து குலுங்கத் துவங்கும். ஒரு ரோபோவை பூமியில் இருந்து ரிமோட் மூலம் இயக்கி, நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் தோட்டத்தைப் பராமரிக்க முடியும். இவ்வாறு ஆராய்ச்சி முடிவுகளை அடுக்குகிறார்கள் விஞ்ஞானிகள்.

யோகா

லண்டன்:பின்லாந்து நாட்டில் உள்ள மிருகக் காட்சி சாலையில் பனிக்கரடி ஒன்று தினமும் 15 நிமிடங்கள் யோகா செய்கிறது. இதை பார்வையாளர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.பின்லாந்து நாட்டில் உள்ள அட்டாரி மிருகக் காட்சி சாலையில், "சான்ட்ரா' என்ற ஆண் பனிக்கரடி ஒன்று உள்ளது.அந்த கரடி தினசரி காலை எழுந்ததும், 15 நிமிடங்கள் யோகா செய்கிறது. அது கால்களை நீட்டியும், கைகளை தரையில் ஊன்றியும், கண்களை ஒரே இடத்தில் நிலை நிறுத்தி யோகா செய்கிறது. பின்னர், கால்களை உயர்த்தி, கைகளால் காலை தொடுகிறது. பின்னர், கால்களை உயரே தூக்குகிறது. பார்வையாளர்களை வியக்க வைக்கும் வகையில், பல்வேறு கோணங்களில், கரடி செய்யும் இந்த யோகா பயிற்சி 15 நிமிடங்கள் வரை நீடிக்கிறது.இந்த அரிய காட்சிகளை பார்ப்பதற்கு, அந்த மிருகக் காட்சி சாலையில் தினமும் பெரும் கூட்டம் கூடுகிறது. ஆன்மிகம் சார்ந்த உடற்பயிற்சியான யோகாவை, கரடி எப்படி கற்றுக்கொண்டது என்றும், அதைப் பற்றி அதற்கு என்ன தெரியும் என்றும் பார்வையாளர்கள் வியப்போடு கேள்வி எழுப்புகின்றனர்.

Friday, September 17, 2010

ஏன்

இரண்டு வயதிலையே ,
எட்டி சென்றுவிட்டது மகிழ்ச்சி,
களவுப்போய்விட்டது கள்ளமில்லா புன்னகை,
பள்ளி சுமையால்,
ஏன் கண்டுகொள்ளவில்லை என் பெற்றோர்கள்?

Thursday, September 2, 2010

அதிசயம்

சிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் சில சிகிச்சைகளை அளித்தனர். குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.

குழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், "இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை'என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.

தன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,"என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை'என்றார்.

ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். "உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது' என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்

Wednesday, September 1, 2010

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்காக - 4

படம்: ஜெய்ஹிந்த்
பாடல்: தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட
கன்னிய பூமி இது

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

வண்ணம் பல வண்ணம்
நம் எண்ணம் ஒன்றல்லோ
பறவைகள் பலவன்றோ
வானம் ஒன்றேன்றோ
தேகம் பலவாகும்
நம் இரத்தம் ஒன்றல்லோ
பாசைகள் பலவன்றோ
தேசம் ஒன்றேன்றோ
பூக்கள் கொண்டு வந்தால்
புண்ணிய தேசமடா
வால்கள் கொண்டு வந்தால்
தலையை வாங்கிடும் தேசமடா
எங்கள் இரத்தம்
எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்த எங்கள் ஸ்ரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே

தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

சட்டம் நம் சட்டம்
புது வேகம் கொள்ளாதோ
வேகமிருந்தால் தான்
வெற்றிகள் உண்டாகும்
மண்ணில் நம் மண்ணில்
புது சக்தி பிறக்காதோ
சக்தி இருந்தால் தான்
சரித்திரம் உண்டாகும்
சட்டம் கயிறு கொண்டு
நீ ஈடுபிடித்து விடு
சரியா இல்லை என்றால்
அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக
புயல் போல் விரைக
அட இளைய இரத்தம் என்ன போலியா
எழுத வேண்டும் புதிய இந்தியா

சுதந்திரத்தை காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட
கன்னிய பூமி இது

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்