இரகசியத்தை சொல்ல படபடக்கும் இதயத்தோடு எத்தனையோ கனவுகளையும் சுமந்தபடி உத்ரா சரணிருக்கும் அறைக்குள் கால் எடுத்து வைத்தாள். அங்கு அவன் அவளிடம் ஒருவார்த்தைகூட பேசவில்லை பேசுவது என்ன அவளை பார்க்க கூட இல்லை அமைதியாக அமர்ந்திருந்தான். சிறிது நேரம் நின்றிருந்தவள் தானாகவே பேச்சை ஆரம்பித்தாள்
"சரண்........"
"உத்ரா இப்போ எதும் என்ன கேட்காத , என்னால பதில் சொல்ல முடியாது.........."
"இல்ல சரண்....... அது......."
"ப்ளிஸ்........." அவனை இரண்டு நிமிடம் உற்றுநோக்கியவள் அமைதியாய் கீழே படுத்துக்கொண்டாள்.
அடுத்த நாள் காலையிலையே இருவரும் சென்னை கிளம்பினர். சரஸ்வதி,கீர்த்தி,விஜி முவரும் அழுதபடியே வழியனுப்ப இருவருமாய் காரில் புறப்பட்டனர். பெற்றவர்கள் அனைவரும் அன்றிரவே திருப்பதி செல்வதால் ராஜாத்தியும், பெருமாளும் இவர்களுடன் வரவில்லை. இவர்கள் மட்டும் தனியாக பயணித்தனர். புறப்படும் போது வராத அழுகை, அவர்கள் தலை மறைந்தவுடன் வந்தது உத்ராவிற்கு. சரண் தான் காரை ஓட்டிகொண்டு வந்தான்.
உத்ரா கண்கலங்கியபடி வர , அதை பார்த்தும் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாய் சிறிது தூரம் வந்த சரண், காரை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டு அவளை பார்த்தான். உத்ரா இவனை பார்க்கவில்லை அழுகையை கட்டுபடுத்த முயன்று கொண்டிருந்தாள், என்ன நினைத்தானோ அவளை தன் தோளில் சாய்த்துகொண்டான். அதற்கு மேல் தாங்காது என்பது போல அழுகை வெடிக்க அவனது சட்டையை ஈரமாக்கினாள். அவள் அழுவதை பொறுக்காதவன்
" உத்தி குட்டி எதுக்கு இப்படி அழற....... வேண்னும்னா திரும்பி போலாமா? ......... அழாதீங்க டா." என்று குழந்தைக்கு சொல்வதுபோல் தலையை தடவி சமாதான படுத்தினான். அவனது அருகாமையோ அல்லது சமாதான பேச்சோ அவளது அழுகை மெல்ல குறைந்தது.அதற்கு மேல் தன்னை கட்டுபடுத்த இயலதாவன் அவளை விலக்கிவிட்டு, காரை எடுத்தான். அவனது செய்கையில் வேறுபாட்டை உணர்ந்தவள், 'என்னாயிற்று திடீரென்று?' என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள். அவர்கள் சென்னைக்கு வரும் போது மதியவேளையாகியிருந்தது, உத்ராவின் கண்களில் பசியை பார்த்தவன் நல்ல உணவகத்திற்கு வண்டியை விட்டான். தன் மனதறிந்து நடந்தவனை காண உள்ளம் நிறைந்தது உத்ராவிற்கு. இருவருக்கும் தேவையானதை ஆர்டர் செய்து வரவழைத்தவன் , அவள் நன்றாக உண்ணும்படி பார்த்துகொண்டான்.
சாப்பிட்டு முடித்ததும் உத்ராவை வீட்டில் கொண்டுபோய்விட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டான். முதலில் பணகளைப்பு தீர குளித்துமுடித்தவள், பின் அவனது அறையில் தனது பொருட்களை அடுக்கி வைத்தாள். வீட்டை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தியவள், இரவுக்கு என்ன செய்யலாம்? என்ன இருக்கிறது? என்று பார்த்துவிட்டு சாப்பாத்தி செய்து குருமா வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். அதன்படி சப்பாத்தி செய்து மணக்க மணக்க குருமாவும் வைத்தாள். அவள் நினைவெல்லாம் சரண் எப்படி இதை ரசித்து சாப்பிடுவான் என்ற கற்பனையில் தான் இருந்தது. அவன் இவள் தலையில் இடியை இறக்க போவது தெரியாமல்.
இருட்டிய பின் வீடுவந்தவன் அவளிடம் பேசாமல் ஒருவித இறுக்கத்துடன் இருந்தான். குளித்துவிட்டு வந்தவனுக்கு சூடாய் தான் செய்ததை ஆசையுடன் பரிமாறியவள், ஆவலாய் அவன் முகம் பார்த்தபடி அமர்ந்தாள். இவள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்துவிட்டு அவளையும் சாப்பிடுமாறு கூறி அவன் பரிமாறினான். இருவருமாய் சாப்பிட்டுவிட்டு எழுந்தனர். அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு சுத்தபடுத்திவிட்டு வந்தாள் உத்ரா. அவளுக்காக காத்திருந்தான் சரண்.உத்ராவிற்கும் புரிந்தது அவன் தனக்காக தான் காத்திருக்கிறான் என்று. அமைதியாய் அவன் முன் நின்றாள். சிறிது நேர அமைதிக்கு பின்
" உத்ரா மன்னிச்சுகோ என்னால இந்த கல்யாணத்த நிறுத்த முடியல....... உனக்கு .... இந்த கல்யாணத்துல சம்மதமில்லனு எனக்கு தெரியும் ........" ஏதோ கோபத்தோடு சொல்லவந்தவளை கைகாட்டி நிறுத்தியவன்
" இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துகோ ...... அதுகப்பறம் நான் சொன்ன மாதிரியே ..... உன் கண்ணுல கண்டிப்பா படமாட்டேன்........ உன் இஷ்டபடி உன் வாழ்கைய அமைச்சுகோ........" என்று விட்டு அவள் முகம் பார்த்தான்.
"சரண்........"
"உத்ரா இப்போ எதும் என்ன கேட்காத , என்னால பதில் சொல்ல முடியாது.........."
"இல்ல சரண்....... அது......."
"ப்ளிஸ்........." அவனை இரண்டு நிமிடம் உற்றுநோக்கியவள் அமைதியாய் கீழே படுத்துக்கொண்டாள்.
அடுத்த நாள் காலையிலையே இருவரும் சென்னை கிளம்பினர். சரஸ்வதி,கீர்த்தி,விஜி முவரும் அழுதபடியே வழியனுப்ப இருவருமாய் காரில் புறப்பட்டனர். பெற்றவர்கள் அனைவரும் அன்றிரவே திருப்பதி செல்வதால் ராஜாத்தியும், பெருமாளும் இவர்களுடன் வரவில்லை. இவர்கள் மட்டும் தனியாக பயணித்தனர். புறப்படும் போது வராத அழுகை, அவர்கள் தலை மறைந்தவுடன் வந்தது உத்ராவிற்கு. சரண் தான் காரை ஓட்டிகொண்டு வந்தான்.
உத்ரா கண்கலங்கியபடி வர , அதை பார்த்தும் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாய் சிறிது தூரம் வந்த சரண், காரை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டு அவளை பார்த்தான். உத்ரா இவனை பார்க்கவில்லை அழுகையை கட்டுபடுத்த முயன்று கொண்டிருந்தாள், என்ன நினைத்தானோ அவளை தன் தோளில் சாய்த்துகொண்டான். அதற்கு மேல் தாங்காது என்பது போல அழுகை வெடிக்க அவனது சட்டையை ஈரமாக்கினாள். அவள் அழுவதை பொறுக்காதவன்
" உத்தி குட்டி எதுக்கு இப்படி அழற....... வேண்னும்னா திரும்பி போலாமா? ......... அழாதீங்க டா." என்று குழந்தைக்கு சொல்வதுபோல் தலையை தடவி சமாதான படுத்தினான். அவனது அருகாமையோ அல்லது சமாதான பேச்சோ அவளது அழுகை மெல்ல குறைந்தது.அதற்கு மேல் தன்னை கட்டுபடுத்த இயலதாவன் அவளை விலக்கிவிட்டு, காரை எடுத்தான். அவனது செய்கையில் வேறுபாட்டை உணர்ந்தவள், 'என்னாயிற்று திடீரென்று?' என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள். அவர்கள் சென்னைக்கு வரும் போது மதியவேளையாகியிருந்தது, உத்ராவின் கண்களில் பசியை பார்த்தவன் நல்ல உணவகத்திற்கு வண்டியை விட்டான். தன் மனதறிந்து நடந்தவனை காண உள்ளம் நிறைந்தது உத்ராவிற்கு. இருவருக்கும் தேவையானதை ஆர்டர் செய்து வரவழைத்தவன் , அவள் நன்றாக உண்ணும்படி பார்த்துகொண்டான்.
சாப்பிட்டு முடித்ததும் உத்ராவை வீட்டில் கொண்டுபோய்விட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டான். முதலில் பணகளைப்பு தீர குளித்துமுடித்தவள், பின் அவனது அறையில் தனது பொருட்களை அடுக்கி வைத்தாள். வீட்டை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தியவள், இரவுக்கு என்ன செய்யலாம்? என்ன இருக்கிறது? என்று பார்த்துவிட்டு சாப்பாத்தி செய்து குருமா வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். அதன்படி சப்பாத்தி செய்து மணக்க மணக்க குருமாவும் வைத்தாள். அவள் நினைவெல்லாம் சரண் எப்படி இதை ரசித்து சாப்பிடுவான் என்ற கற்பனையில் தான் இருந்தது. அவன் இவள் தலையில் இடியை இறக்க போவது தெரியாமல்.
இருட்டிய பின் வீடுவந்தவன் அவளிடம் பேசாமல் ஒருவித இறுக்கத்துடன் இருந்தான். குளித்துவிட்டு வந்தவனுக்கு சூடாய் தான் செய்ததை ஆசையுடன் பரிமாறியவள், ஆவலாய் அவன் முகம் பார்த்தபடி அமர்ந்தாள். இவள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்துவிட்டு அவளையும் சாப்பிடுமாறு கூறி அவன் பரிமாறினான். இருவருமாய் சாப்பிட்டுவிட்டு எழுந்தனர். அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு சுத்தபடுத்திவிட்டு வந்தாள் உத்ரா. அவளுக்காக காத்திருந்தான் சரண்.உத்ராவிற்கும் புரிந்தது அவன் தனக்காக தான் காத்திருக்கிறான் என்று. அமைதியாய் அவன் முன் நின்றாள். சிறிது நேர அமைதிக்கு பின்
" உத்ரா மன்னிச்சுகோ என்னால இந்த கல்யாணத்த நிறுத்த முடியல....... உனக்கு .... இந்த கல்யாணத்துல சம்மதமில்லனு எனக்கு தெரியும் ........" ஏதோ கோபத்தோடு சொல்லவந்தவளை கைகாட்டி நிறுத்தியவன்
" இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துகோ ...... அதுகப்பறம் நான் சொன்ன மாதிரியே ..... உன் கண்ணுல கண்டிப்பா படமாட்டேன்........ உன் இஷ்டபடி உன் வாழ்கைய அமைச்சுகோ........" என்று விட்டு அவள் முகம் பார்த்தான்.
No comments:
Post a Comment