காலைவேளை வழக்கம் போல் காபியை உறிஞ்சியபடி யோசித்துகொண்டிருந்தாள் உத்ரா. இன்றோடு நிச்சயம் முடிந்து நான்குநாட்கள் ஆகிவிட்டன. இந்த நான்கு நாட்களும் தினமும் அவளின் தாயும் தந்தையும் வந்து 'ஏன் இப்படி இருக்கிறாய்?' என்று கேட்காத நேரமில்லை, உத்ராவும் ஒன்றுமில்லையென்று சொல்லியே ஓய்ந்துபோனாள். மல்லிகார்ஜுனுக்கு மகளுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லையோ என்ற எண்ணம் தோன்றாததுக்கு காரணாமும் உத்ரா தான். சரணை பற்றிய பேச்சு வரும் போது ஒன்று அறைக்குள் சென்றுவிடுவாள் இல்லையென்றால் முகம்தெரியாதபடி குனிந்து கொள்வாள், இதை அவர்கள் வெட்கம் என்று எடுத்துகொண்டனர். உத்ராவிற்கு கூட சிலசமயம் தோன்றும் உண்மையை சொல்லி கல்யாணத்தை நிறுத்திவிடலாமா என்று, அப்போது பார்த்து கல்யாண விஷயமாக ஏதாவது பேச்சுவரும் அதில் அவர்கள் அடையும் சந்தோஷத்தை பார்த்து வாயை மூடிகொள்வாள். அதை தவிரவும் ஏதோ ஒன்று தடுத்தது.
கீர்த்திக்கும், விஜிக்கும் மட்டும் இவளது செயல்பாடுகளில் வேறுபாடு தெரிந்தது. நிச்சயத்திற்கு ஷாப்பிங் சென்ற போது ஆர்வமாய் அனைத்தையும் ஆராய்ந்தவள், கல்யாணத்திற்கு என்று வரும் போது ஆர்வமில்லாமல் எதையாவது எடுங்கள் என்று சொல்லவது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்களும் அவளை குடைய ஆரம்பித்திருந்தனர். ஏற்கனவே தாய், தந்தையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிகொண்டிருந்தாள் , இதில் இவர்களும் சேர்ந்துகொள்ள எப்போதும் தனிமையில் இருப்பதே வாடிக்கையானது.
இதற்கிடையில் எத்தனையோ முறை சரண் உத்ராவிடம் பேச முயன்றான், அதற்கு இவள் தான் தயாராக இல்லை, போனில் கூப்பிட்டுகொண்டே இருக்கிறான் என்று போனை ஸ்விட்ச் ஆப் செய்து மூலையில் போட்டுவிட்டாள், நேரில் வந்தான் என்றால் அறையை விட்டு வெளியில் வரமாட்டாள், இப்படியே அவனிடம் கண்ணமுச்சி ஆடி கொண்டிருந்தாள். சரணது நிலை தான் பாவமாக இருந்தது எத்தனை ஆசைகளோடு இருந்தான் நடுவில் என்னெனவோ நடந்துவிட்டது. அதில் முழுக்க இவனது தவறு தான் என்றாலும் அதை சரி படுத்த ஒருவாய்ப்பு கேட்கலாம் என்றால் அவளை பார்க்க கூட முடியவில்லையே.., தினமும் அவளது பார்வைக்காய் ஏங்கி தவித்தான்.
இவர்களின் கண்ணாமூச்சியை கவனமாய் பார்த்துகொண்டிருந்த விஜிக்கு ஓரளவு என்ன நடக்கிறது என்று புரிய, அன்றிரவு சரணை கேள்விகளால் துளைத்தெடுத்தாள் அவனும் நடந்தது அனைத்தையும் சொல்லிமுடித்தான். விஜிக்கு அவனை அடித்தால் கூட தேவலாம் என்றிருந்தது, தான் அத்தனை சொல்லியும் அவளை தவறாக நினைத்திருக்கிறான், அப்படி நினைப்பவன் எதற்காக கல்யாணம் செய்துகொள்வதாய் சொல்லவேண்டும்? இந்த நிலை எனக்கு வந்திருந்தால் சும்மா விட்டுருப்பானா? என்று மனதில் ஒடிய எதையும் மறைக்காமல் அப்படியே கேட்டுவிட்டாள்.அவனால் பதிலெதும் சொல்ல முடியவில்லை. தான் செய்தது தவறென்பதை ஒத்துகொண்டவன், தனக்கு உதவுமாறு கேட்டுகொண்டான். கோபம் இருப்பினும் தன்னை கட்டுபடுத்திகொண்டவள், என்ன செய்ய வேண்டுமென்பதை கேட்டுகொண்டு நகர்ந்தாள்.
சரண் சொன்னதுபோலவே உத்ராவை வற்புறுத்தி Restaurant கு அழைத்துவந்தவள், தூரத்தில் அவன் வருவது தெரிந்தவுடன்
"இப்போ வந்திடறேன் டி" என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள்சென்ற சிறிது நேரத்தில் இவன் வந்து அமரவும் அவளுக்கு புரிந்துவிட்டது இது இவனது வேலைதான் என்று, கோபத்தோடு எழுந்து கிளம்பபோனவளை கையை பிடித்து தடுத்தவன்
" ப்ளிஸ் உத்ரா ஒரு பத்துநிமிஷம் நான் என்ன சொல்லறேன்னு கேட்டுட்டு போ ...... ப்ளிஸ்" கெஞ்சலாகவும் அதே சமயம் உரிமையுடனும் கேட்டான்.அமைதியாக அமர்ந்தாள்.
"நான் பேசியது தப்பு தான், இல்லைனு சொல்லல அத திருத்திக்க ஒரு வாய்ப்புகொடுனு தான் கேட்கறேன்"
"........."
"நான் உன்ன லவ் பண்ணறேன்.......... இத இந்த மாதிரி சூழ்நிலைல சொல்ல வேண்டி வரும்னு நான் நினைக்கல.... சாரி மா....... ரியலி சாரி...." அவளை முதன்முதலாக பார்த்த தருணத்திலிருந்து நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தான்.
" இதுனால மட்டும் நான் செஞ்சது சரினு ஆகிடாது....... எனக்கு தெரியும் என்னை நீ ரொம்ப லவ் பண்ணறனு அதுனால தான் நான் சொன்னத உன்னால ஜீரணிக்க முடியல......... மன்னிச்சுகோ...... உன் மேல அதிகமான காதல் தான் என்ன அப்படி பேசவைச்சுடுச்சு.... மன்னிச்சுகோ டி........ என் கூட பேசவே மாட்டியா?.........." அவன் கண்களில் இருந்த ஏக்கமும், குரலில் இருந்த வருத்தமும் என்னவோ செய்ய வாய் திறந்தாள்
" அதுகாக என்னவேனும்னாலும் பேசுவீங்களா........... யார்கூடவேனும்னாலும் சேர்த்துவைச்சு பேசுவீங்க...... வாழ்க்கமுழுக்க அதை சகிச்சுகிட்டு என்னால இருக்க முடியாது.........." அவள் சொன்னது எச்சரிக்க தான், இவனோ
" சரி......... உனக்கு நம்பிக்கை இல்லனா வேண்டாம்..... நான் இந்த கல்யாணத்த எப்படியாவது நிறுத்திடறேன்........ இனி உன் கண்ணுல கூட நான் படமாட்டேன்..." சொல்லி முடிக்கும் போதே தொண்டையை அடைத்தது, அவள் முகம் பாராமல் வந்துவிட்டான். இவள் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.
கீர்த்திக்கும், விஜிக்கும் மட்டும் இவளது செயல்பாடுகளில் வேறுபாடு தெரிந்தது. நிச்சயத்திற்கு ஷாப்பிங் சென்ற போது ஆர்வமாய் அனைத்தையும் ஆராய்ந்தவள், கல்யாணத்திற்கு என்று வரும் போது ஆர்வமில்லாமல் எதையாவது எடுங்கள் என்று சொல்லவது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்களும் அவளை குடைய ஆரம்பித்திருந்தனர். ஏற்கனவே தாய், தந்தையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிகொண்டிருந்தாள் , இதில் இவர்களும் சேர்ந்துகொள்ள எப்போதும் தனிமையில் இருப்பதே வாடிக்கையானது.
இதற்கிடையில் எத்தனையோ முறை சரண் உத்ராவிடம் பேச முயன்றான், அதற்கு இவள் தான் தயாராக இல்லை, போனில் கூப்பிட்டுகொண்டே இருக்கிறான் என்று போனை ஸ்விட்ச் ஆப் செய்து மூலையில் போட்டுவிட்டாள், நேரில் வந்தான் என்றால் அறையை விட்டு வெளியில் வரமாட்டாள், இப்படியே அவனிடம் கண்ணமுச்சி ஆடி கொண்டிருந்தாள். சரணது நிலை தான் பாவமாக இருந்தது எத்தனை ஆசைகளோடு இருந்தான் நடுவில் என்னெனவோ நடந்துவிட்டது. அதில் முழுக்க இவனது தவறு தான் என்றாலும் அதை சரி படுத்த ஒருவாய்ப்பு கேட்கலாம் என்றால் அவளை பார்க்க கூட முடியவில்லையே.., தினமும் அவளது பார்வைக்காய் ஏங்கி தவித்தான்.
இவர்களின் கண்ணாமூச்சியை கவனமாய் பார்த்துகொண்டிருந்த விஜிக்கு ஓரளவு என்ன நடக்கிறது என்று புரிய, அன்றிரவு சரணை கேள்விகளால் துளைத்தெடுத்தாள் அவனும் நடந்தது அனைத்தையும் சொல்லிமுடித்தான். விஜிக்கு அவனை அடித்தால் கூட தேவலாம் என்றிருந்தது, தான் அத்தனை சொல்லியும் அவளை தவறாக நினைத்திருக்கிறான், அப்படி நினைப்பவன் எதற்காக கல்யாணம் செய்துகொள்வதாய் சொல்லவேண்டும்? இந்த நிலை எனக்கு வந்திருந்தால் சும்மா விட்டுருப்பானா? என்று மனதில் ஒடிய எதையும் மறைக்காமல் அப்படியே கேட்டுவிட்டாள்.அவனால் பதிலெதும் சொல்ல முடியவில்லை. தான் செய்தது தவறென்பதை ஒத்துகொண்டவன், தனக்கு உதவுமாறு கேட்டுகொண்டான். கோபம் இருப்பினும் தன்னை கட்டுபடுத்திகொண்டவள், என்ன செய்ய வேண்டுமென்பதை கேட்டுகொண்டு நகர்ந்தாள்.
சரண் சொன்னதுபோலவே உத்ராவை வற்புறுத்தி Restaurant கு அழைத்துவந்தவள், தூரத்தில் அவன் வருவது தெரிந்தவுடன்
"இப்போ வந்திடறேன் டி" என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள்சென்ற சிறிது நேரத்தில் இவன் வந்து அமரவும் அவளுக்கு புரிந்துவிட்டது இது இவனது வேலைதான் என்று, கோபத்தோடு எழுந்து கிளம்பபோனவளை கையை பிடித்து தடுத்தவன்
" ப்ளிஸ் உத்ரா ஒரு பத்துநிமிஷம் நான் என்ன சொல்லறேன்னு கேட்டுட்டு போ ...... ப்ளிஸ்" கெஞ்சலாகவும் அதே சமயம் உரிமையுடனும் கேட்டான்.அமைதியாக அமர்ந்தாள்.
"நான் பேசியது தப்பு தான், இல்லைனு சொல்லல அத திருத்திக்க ஒரு வாய்ப்புகொடுனு தான் கேட்கறேன்"
"........."
"நான் உன்ன லவ் பண்ணறேன்.......... இத இந்த மாதிரி சூழ்நிலைல சொல்ல வேண்டி வரும்னு நான் நினைக்கல.... சாரி மா....... ரியலி சாரி...." அவளை முதன்முதலாக பார்த்த தருணத்திலிருந்து நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தான்.
" இதுனால மட்டும் நான் செஞ்சது சரினு ஆகிடாது....... எனக்கு தெரியும் என்னை நீ ரொம்ப லவ் பண்ணறனு அதுனால தான் நான் சொன்னத உன்னால ஜீரணிக்க முடியல......... மன்னிச்சுகோ...... உன் மேல அதிகமான காதல் தான் என்ன அப்படி பேசவைச்சுடுச்சு.... மன்னிச்சுகோ டி........ என் கூட பேசவே மாட்டியா?.........." அவன் கண்களில் இருந்த ஏக்கமும், குரலில் இருந்த வருத்தமும் என்னவோ செய்ய வாய் திறந்தாள்
" அதுகாக என்னவேனும்னாலும் பேசுவீங்களா........... யார்கூடவேனும்னாலும் சேர்த்துவைச்சு பேசுவீங்க...... வாழ்க்கமுழுக்க அதை சகிச்சுகிட்டு என்னால இருக்க முடியாது.........." அவள் சொன்னது எச்சரிக்க தான், இவனோ
" சரி......... உனக்கு நம்பிக்கை இல்லனா வேண்டாம்..... நான் இந்த கல்யாணத்த எப்படியாவது நிறுத்திடறேன்........ இனி உன் கண்ணுல கூட நான் படமாட்டேன்..." சொல்லி முடிக்கும் போதே தொண்டையை அடைத்தது, அவள் முகம் பாராமல் வந்துவிட்டான். இவள் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.
No comments:
Post a Comment