அதிகாலை நேரம் அந்த மண்டபத்தில் மெல்லிய மங்கல இசை ஒலிக்க , அதை கேட்டு ரசித்தபடி, சந்தோஷத்தோடு இனிய பரபரப்பும் தொற்றிகொள்ள'அதை செய் இதை செய்' பெரியவர்களும் சிறியவர்களும் வேலை வாங்கியபடியும் , செய்தபடியும் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர். தாங்கள் மணமகன்கள் என்பதை மறந்து ரிஷி,விக்கி,சரண் முவரும் ஆளுக்கு ஒரு வேலை செய்தபடி வந்தவர்களையும் கவனித்துகொண்டிருந்தனர். மணமகள்களான உத்ரா,விஜி,கீர்த்தி முவரும் புதுபெண் நாணத்துடன் மணமேடையில் தங்களின் இணையை சந்திக்க போகும் ஆர்வத்தில் தங்களை நேர்த்தியாய் அலங்கரித்து கொண்டிருந்தனர். சரஸ்வதி - மல்லிகார்ஜுன், பிரபாவதி - கண்ணன், குருமூர்த்தி - லட்சுமியம்மாள், ராஜாத்தி - பெருமாள் அனைவரும் தங்கள் பிள்ளைகளின் வாழ்வு இனி இன்பமையமாக போவதை நினைத்து மகிழ்ந்தபடி ஐயர் சொன்ன வேலைகளை செய்துகொண்டும், வருபவர்களை வரவேற்று உபசரித்தபடியும் இருந்தனர்.
மணமகன்களை மேடைக்கு அழைக்க முவரும் சென்று அமர்ந்தனர். மணமகளும் அழைக்கப்பட அனைவரின் கவனமும் மணமகள் அறை வாசலிலேயே இருந்தது. தேவதைகளுக்கு நிகராய் கண்களில் கனவுகளோடு முவரும் மெல்லநடையிட்டு வர, அவர்களது கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியோடு அவர்களை பார்த்துகொண்டிருந்தனர் இவர்கள்.தங்களின் ஜோடிகளுக்கு அருகில் அமர்ந்தனர். ஐயர் சொல்லி கொடுத்தப்படி " நான் இவளை என் இணையாக ஏற்கிறேன், எந்த ஒரு துன்பதிலும் இவளுக்கு உறுதுணையாக இருப்பேன், இனி நானும் இவளும் வேறல்ல என்று அக்னி தேவனின் சாட்சியாகவும், இங்குள்ள பெரியோரின் சாட்சியாகவும் உறுதி கூறுகிறேன் " என்று மணமகன்களும் , மணமகள்களும் உறுதிகூறினர். மங்கள வாத்தியங்கள் முழங்க விஜி நாத்தனார் முடிச்சிட முதலில் சரண் உத்ராவின் கழுத்தில் தாலிகட்டி அவளை தனது மனைவியாக்கிகொண்டான். பின் உத்ராவும் , கீர்த்தியும் சேர்ந்து நாத்தனார் முடிச்சிட விஜியின் கழுத்தில் ரிஷி தாலிகட்டினான். கடைசியாய் கீர்த்திக்கும் விஜியே நாத்தனார் முடிச்சிட தாலிகட்டி அவளை தன் இணையாக்கி கொண்டான் விக்கி. பெற்றவர்களின் மனதும் கண்களும் நிறைய ஆசிகூறினர்.
சின்ன சீண்டல்கள், செல்ல கொஞ்சல்கள், யாரும் அறியாத சில்மிஷ்ங்கள் என்று விக்கி - கீர்த்தி, விஜி - ரிஷி இரண்டு ஜோடிகளும் தங்களுக்கான தனி உலகத்தில் சஞ்சரிக்க, உத்ரா - சரண் மட்டும் அமைதியாய் இருந்தனர். அவர்களை போல் விளையாட இவர்களுக்கும் உள்ளுர ஆசை தான் என்ன செய்ய முடியவில்லை. அன்று மாலையே கீர்த்தியும், விஜியும் தம் புகுந்த வீட்டிற்கு சென்றனர். சரணும், உத்ராவும் அன்றிரவு உத்ராவின் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் சென்னை செல்வதாய் முடிவானது. மூன்று ஜோடிகளுக்கும் அன்றே முதலிரவு என்று முடிவு செய்யப்பட்டது.பெரியவர்கள் அனைவரும் மூவரையும் தயார்படுத்தி அனுப்பி வைத்தனர்.
புதிதாய் தோன்றிய நாணத்தோடு கையில் பால் சொம்பை வைத்துகொண்டு நடக்க தெரியாதவள் நடப்பது போல விக்கியினது அறைக்குள் நுழைந்தாள் கீர்த்தி. அவளை அனுஅனுவாய் அவன் ரசிக்க இவளுக்கு வெட்கம் தின்றது.அப்படியே நின்றிருந்தவளை தன்னருகில் அமர்த்திகொண்டவன்
"கீர்த்தி இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?........., ஆனா ஒரு வருத்தம் ........."
"என்னங்க....அது?"
"நீ என்ன பெயர் சொல்லி , வா டா போடா கூப்பிடு டி........இந்த எங்க , என்னங்க எல்லாம் வேண்டாம்"
"இவ்வளவு தானா?..... சரி டா" செல்லமாக முறைத்துவிட்டு
"என் வருத்தம் அதில்ல நான் தான் இது வரைக்கும் உன் கிட்ட I LOVE U சொல்லிருக்கேன், நீ ஒரு தடவ கூட சொல்லலையே......."
"அது........ சொன்னா தான் உனக்கு தெரியுமா...... சரி உனக்காக சொல்லுறேன் ....." என்று அவனது கைகளை பிடித்து தன் கைக்குள் வைத்தவள் " I LOVE U விக்கி" என்று அவனது கையில் மென்மையாக முத்தமிட்டாள் அவன் அவளை அணைத்துகொண்டான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரிஷியின் அறையில் நுழைந்த விஜிக்கு அவனை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை, காலையிலிருந்து எதையாவது செய்து அவளை வெட்கபட வைத்துகொண்டிருந்தான்.விஜியை மனதினை படித்தவன் அவளிடம் சிறிது விளையாட நினைத்து போனை எடுத்தவன் தன் அன்னைக்கு கால் செய்து
"Darling ......... darling.... எங்க இருக்க?" என விஜி அவனை முறைத்துகொண்டிருந்தாள்.
"ஏன் டா படுத்தற ........ விஜி பார்த்திகிட்டு இருக்காளா.... அவள ஒட்டுறதுக்கு தான் எனக்கு கூப்பிடயா...?"
"அதெப்படி டார்லிங் இவ்வளவு கரக்டா சொல்லுற........"
"உனக்கு அம்மாவாச்சே.......... குடு அவகிட்ட......"
"எதுக்கு டார்லிங்.?"
"குடு டா நா"
"இந்தா விஜி என் டார்லிங் உன் கிட்ட பேசனுமாம்........." கையில் வாங்கியவள் அதை காதிற்கு கொடுத்து
"சொல்லுங்க அத்தை..." என ரிஷியின் முகத்தில் ஈயாடவில்லை, அதை பார்த்து சிரித்தாள் விஜி, லட்சுமியம்மாள்
"என்னமா ஷாக் ஆகிடானா?"
"ஆமா அத்த பேயறஞ்சமாதிரி உட்காந்திருக்காரு....." சிரித்தவர்
"சரி டா..... வைச்சுட வா......" போனை கட் செய்துவிட்டு தன் பிள்ளையை நினைத்தபடி தூங்க சென்றார். போனை வைத்துவிட்டு அவனை பார்த்தவளுக்கு சிரிப்பை கட்டுபடுத்தமுடியவில்லை. அவளை இழுத்து தன்னோடு ஒட்டி அமரவைத்தவன்
"ஏ......... உனக்கு தெரியுமா?"
"ம்..... அத்த தான் சொன்னாங்க......"
"வேற என்ன சொன்னாங்க?....."
"ம்..........என் பையன் ஒரு வாலு அவன நீ தான் அடக்கனும்னு........ அதுனால இனி குறும்பு பண்ணா அடிதான்.......புரிஞ்சுதா?" என்று மிரட்ட
"எங்க அடி பார்போம்.........." என்று தன் குறும்புகளை முழுவதுமாக காண்பிக்க தொடங்கினான்.
மணமகன்களை மேடைக்கு அழைக்க முவரும் சென்று அமர்ந்தனர். மணமகளும் அழைக்கப்பட அனைவரின் கவனமும் மணமகள் அறை வாசலிலேயே இருந்தது. தேவதைகளுக்கு நிகராய் கண்களில் கனவுகளோடு முவரும் மெல்லநடையிட்டு வர, அவர்களது கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியோடு அவர்களை பார்த்துகொண்டிருந்தனர் இவர்கள்.தங்களின் ஜோடிகளுக்கு அருகில் அமர்ந்தனர். ஐயர் சொல்லி கொடுத்தப்படி " நான் இவளை என் இணையாக ஏற்கிறேன், எந்த ஒரு துன்பதிலும் இவளுக்கு உறுதுணையாக இருப்பேன், இனி நானும் இவளும் வேறல்ல என்று அக்னி தேவனின் சாட்சியாகவும், இங்குள்ள பெரியோரின் சாட்சியாகவும் உறுதி கூறுகிறேன் " என்று மணமகன்களும் , மணமகள்களும் உறுதிகூறினர். மங்கள வாத்தியங்கள் முழங்க விஜி நாத்தனார் முடிச்சிட முதலில் சரண் உத்ராவின் கழுத்தில் தாலிகட்டி அவளை தனது மனைவியாக்கிகொண்டான். பின் உத்ராவும் , கீர்த்தியும் சேர்ந்து நாத்தனார் முடிச்சிட விஜியின் கழுத்தில் ரிஷி தாலிகட்டினான். கடைசியாய் கீர்த்திக்கும் விஜியே நாத்தனார் முடிச்சிட தாலிகட்டி அவளை தன் இணையாக்கி கொண்டான் விக்கி. பெற்றவர்களின் மனதும் கண்களும் நிறைய ஆசிகூறினர்.
சின்ன சீண்டல்கள், செல்ல கொஞ்சல்கள், யாரும் அறியாத சில்மிஷ்ங்கள் என்று விக்கி - கீர்த்தி, விஜி - ரிஷி இரண்டு ஜோடிகளும் தங்களுக்கான தனி உலகத்தில் சஞ்சரிக்க, உத்ரா - சரண் மட்டும் அமைதியாய் இருந்தனர். அவர்களை போல் விளையாட இவர்களுக்கும் உள்ளுர ஆசை தான் என்ன செய்ய முடியவில்லை. அன்று மாலையே கீர்த்தியும், விஜியும் தம் புகுந்த வீட்டிற்கு சென்றனர். சரணும், உத்ராவும் அன்றிரவு உத்ராவின் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் சென்னை செல்வதாய் முடிவானது. மூன்று ஜோடிகளுக்கும் அன்றே முதலிரவு என்று முடிவு செய்யப்பட்டது.பெரியவர்கள் அனைவரும் மூவரையும் தயார்படுத்தி அனுப்பி வைத்தனர்.
புதிதாய் தோன்றிய நாணத்தோடு கையில் பால் சொம்பை வைத்துகொண்டு நடக்க தெரியாதவள் நடப்பது போல விக்கியினது அறைக்குள் நுழைந்தாள் கீர்த்தி. அவளை அனுஅனுவாய் அவன் ரசிக்க இவளுக்கு வெட்கம் தின்றது.அப்படியே நின்றிருந்தவளை தன்னருகில் அமர்த்திகொண்டவன்
"கீர்த்தி இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?........., ஆனா ஒரு வருத்தம் ........."
"என்னங்க....அது?"
"நீ என்ன பெயர் சொல்லி , வா டா போடா கூப்பிடு டி........இந்த எங்க , என்னங்க எல்லாம் வேண்டாம்"
"இவ்வளவு தானா?..... சரி டா" செல்லமாக முறைத்துவிட்டு
"என் வருத்தம் அதில்ல நான் தான் இது வரைக்கும் உன் கிட்ட I LOVE U சொல்லிருக்கேன், நீ ஒரு தடவ கூட சொல்லலையே......."
"அது........ சொன்னா தான் உனக்கு தெரியுமா...... சரி உனக்காக சொல்லுறேன் ....." என்று அவனது கைகளை பிடித்து தன் கைக்குள் வைத்தவள் " I LOVE U விக்கி" என்று அவனது கையில் மென்மையாக முத்தமிட்டாள் அவன் அவளை அணைத்துகொண்டான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரிஷியின் அறையில் நுழைந்த விஜிக்கு அவனை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை, காலையிலிருந்து எதையாவது செய்து அவளை வெட்கபட வைத்துகொண்டிருந்தான்.விஜியை மனதினை படித்தவன் அவளிடம் சிறிது விளையாட நினைத்து போனை எடுத்தவன் தன் அன்னைக்கு கால் செய்து
"Darling ......... darling.... எங்க இருக்க?" என விஜி அவனை முறைத்துகொண்டிருந்தாள்.
"ஏன் டா படுத்தற ........ விஜி பார்த்திகிட்டு இருக்காளா.... அவள ஒட்டுறதுக்கு தான் எனக்கு கூப்பிடயா...?"
"அதெப்படி டார்லிங் இவ்வளவு கரக்டா சொல்லுற........"
"உனக்கு அம்மாவாச்சே.......... குடு அவகிட்ட......"
"எதுக்கு டார்லிங்.?"
"குடு டா நா"
"இந்தா விஜி என் டார்லிங் உன் கிட்ட பேசனுமாம்........." கையில் வாங்கியவள் அதை காதிற்கு கொடுத்து
"சொல்லுங்க அத்தை..." என ரிஷியின் முகத்தில் ஈயாடவில்லை, அதை பார்த்து சிரித்தாள் விஜி, லட்சுமியம்மாள்
"என்னமா ஷாக் ஆகிடானா?"
"ஆமா அத்த பேயறஞ்சமாதிரி உட்காந்திருக்காரு....." சிரித்தவர்
"சரி டா..... வைச்சுட வா......" போனை கட் செய்துவிட்டு தன் பிள்ளையை நினைத்தபடி தூங்க சென்றார். போனை வைத்துவிட்டு அவனை பார்த்தவளுக்கு சிரிப்பை கட்டுபடுத்தமுடியவில்லை. அவளை இழுத்து தன்னோடு ஒட்டி அமரவைத்தவன்
"ஏ......... உனக்கு தெரியுமா?"
"ம்..... அத்த தான் சொன்னாங்க......"
"வேற என்ன சொன்னாங்க?....."
"ம்..........என் பையன் ஒரு வாலு அவன நீ தான் அடக்கனும்னு........ அதுனால இனி குறும்பு பண்ணா அடிதான்.......புரிஞ்சுதா?" என்று மிரட்ட
"எங்க அடி பார்போம்.........." என்று தன் குறும்புகளை முழுவதுமாக காண்பிக்க தொடங்கினான்.
No comments:
Post a Comment