தன்னிகற்ற தந்தையே!
நான் தாயின் வயிற்றில் கருவான பொழுதே
தியாகங்களை முதலாக்கினீர்
நான் பிறந்த கணமே - உங்கள்
உழைப்பை மிகுதியக்கினீர்
நான் நடக்க ஆரம்பித்ததும் - உங்கள்
உழைப்பை இன்னும் பண்மடங்ககினீர்
நான் பள்ளியை அடைந்ததும் - உங்கள்
அறிவை என் முதல் ஆசானாகினீர்
அடுத்தது நீர் செய்தது உத்தமம் - "தோலுக்கு
மீறிய பிள்ளையை தோழனாய் தன் பார்ப்பேன்" என்று
என்னை உமக்கு தோழனாக்கினீர்
நான் தோல்வி கண்டு துவண்டபொழுது - ஆறுதல்
மொழிக்கூறி ஊக்கப்படுத்தினீர்
என்னை சான்றோர்கள் பலர் போற்றும்
மனிதனாக்கினீர்
தன் பிள்ளை கடனாளி ஆககூடாது - என்று
உழைத்து சொத்துகள் சேர்த்தீர்
ஆனால் இன்று நான் கடனாளியாகத் தான் இருக்கிறேன்
உமது தியாகத்தின் முன்பு.
No comments:
Post a Comment