மகனே!
நான் உன்னை பள்ளியில் சேர்த்தேன்
நீயோ என்னை மூதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டாய்
அன்றும் சரி இன்றும் சரி உன்னிடம் மாற்றம் ஏதுவுமில்லை
நான் மட்டும் தான் மாறிவிட்டேன் - நீ
இன்று போல் அன்றும் கண்கலங்காமல் கையாட்டிவிட்டு சென்றாய்
நானும் இன்று போல் அன்றும் கண்கலங்கினேன் தான் - ஆனால்
அன்று"எத்தகைய பிள்ளையை பெற்றிருக்கிறேன்" என்று
இன்றோ"இத்தகைய பிள்ளையை பெற்றேனே"என்று