நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Tuesday, October 4, 2011

யார் நீ?

வாழ்கை முழுவதும் கூட வந்தது
கனிவாய் கவனித்து கொண்டது
இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டது
நான் அதனிடம் கேட்டேன்"நீ யார்?
எனக்கு ஒன்றேன்றதும் துடித்து போனாயே
நீ என் தாயா?
அதட்டி அறிவுட்டினாயே நீ என் தந்தையா?
தவறு செய்தபோது திருத்தினாயே நீ என் தமையனா?
எனக்காய் விட்டு கொடுத்தாயே நீ என் தமக்கையா?
சரிக்கு சரியாய் சண்டையிட்டாயே நீ என் தம்பியா?
எனக்காய் வாதடுவாயே நீ என் தங்கையா? "என்று
"நீ மேற்கூறிய அனைத்திற்கும் என் ஓரே பதில் இல்லை"என்றது
"பின் நீ யார்?"என்றேன் "நட்பு" என்றது.
எல்லா உறவுகளையும் உணர்வுகளையும் அதனுள் கண்டேன்
உண்மை உணர்ந்தேன்.

No comments: