பத்து திங்கள் எனை சுமந்து
உயிர் போகும் வலி பொறுத்து
எனக்காய் என்னை ஈன்றேடுத்து
நித்தம் நித்திரையின்றி எனை காத்து
அழியா செல்வமாம் நல்கல்வி கொடுத்து
ஊர் புகழ நல் ஓழுக்கம் கொடுத்து
சான்றோர் போற்ற உயர் பண்பு கொடுத்து
நான் அழுதால் நீ அழுது, நான் சிரித்தால் நீயும் சிரித்து
இத்தனை ஆண்டுகள் என்னை சீராய் வளர்த்த - என்
அன்னையே! இத்தனை கொடுத்த உனக்கு நான் என்ன
தர இயலும் எனது அன்பினை தவிர - எனக்காய் இன்னும்
ஒன்று கூட கொடுத்து விடு தாயே - வரும் பிறவியில்
நான் உந்தன் தாயாய் இருக்க.