நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Friday, October 21, 2011

யாரலும் மாற்ற முடியாது

வருத்தம் போக்க வந்தவளே!-என்
வாழ்வின் ஓளியானவளே!-நான்
உன்னை முதலில் கண்ட பொழுது என்னை
நோக்கி சிந்தினாயே ஒர் புன்னகை அது
இன்னும் என் நெஞ்சு கூட்டில் பத்திரமாய் இருக்கிறது
நினைத்தாளே பரவசம் தருகிறது - ஏனோ
நீ திட்டும் போதும் வலிப்பதில்லை - நீ
முகம் சுருக்கினால் தான் வலிக்கிறது - நீ
எனக்காய் தேர்தெடுக்கும் ஒவ்வொன்றும் ஆகிறது என் பொக்கிஷங்களாய்
நீ சொல்லும் 'அக்கா' என்னும் ஒர் சொல்லுக்காய் ஏங்கினாலும் - நீ
பெயர் சொல்லி அழைக்கும் போதும் அதே சுகம் கிட்டத்தான் செய்கிறது
யாருக்கு தெரியும் என்னைவிட அதிகம் உன்னைப்பற்றி - நீ என்
தங்கையானாலும் நான் உன் தாயே,நீ என் சேயே - இதை
யாரலும் மாற்ற முடியாது.

No comments: