பொழுது முழுவதுமாக புலராத அதிகாலை நேரம் அந்த மார்கழி மாத குளிரிலும் தன் குஞ்சுகளின் பசி மிகுந்த குரல் கேட்டு"இதோ நான் கிளம்பிவிட்டேன்" என்று பலவிதமான பறவைகள் தத்தம் இனிய குரலில் அறிவித்தபடியே சென்றன அதை கேட்ட மனிதர்களும் "இதோ நாங்களும் கிளம்பபோகிறோம்" என்றபடி ஆங்காங்கே வேக நடையிட்டு சென்று கொண்டிருந்தனர்.ஈர பதத்தோடு வீசிய காற்றை தன் காதல் தூதுவனாக்கி வண்டுகளையும், தேனீகளையும் சீக்கிரம் வர சொல்லி செய்தி அனுப்பின பூக்கள்.அவைகளும் "செய்தி கிடைத்தது கண்ணே இதோ வந்துவிட்டேன்" என்று ரீங்காரமிட்டபடி வந்து பூக்களிகளிடம் காதல் மொழி பேசின. இந்த இனிய இசையை கெடுக்க முயன்று ஒலித்தது பால்காரனின் ஹாரன்.அந்த சத்தமும் இசையாய் மாறிவிட தோற்று போய் ஒய்ந்தது. இந்த இனிய சூழலை தந்தையின் தோளில் சாய்ந்து ரசித்தபடியே நடந்தாள் உத்ரா.
சற்றுமுன் தனக்கிருந்த மனநிலையையும் இப்போதிருக்கும் மனநிலையையும் ஒப்பிட்டு பார்த்தாள்.இந்த மாற்றதிற்கு காரணமான தன் தந்தையை பெருமையோடு பார்த்து புன்னகைத்தாள் அவளின் எண்ணம் புரிந்தவர் காலரை தூக்கிவிட்டு சிரிக்க அவளும் வாய்விட்டு சிரித்தாள்.ஏதோ பேசியபடி வீடுவந்து சேர்ந்தனர்.இருவரின் முகம் பார்த்தவரின் மனம் நிறைய புன்னகைத்தார் சரஸ்வதி.அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அலுவலகம் கிளம்பினாள் உத்ரா.என்றுமில்லாத அதிசயமாய் சீக்கிரம் ரயில்நிலையம் வந்திருந்தனர் இருவரும் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தபடி கீர்த்தி கேட்டாள்.
"டைம் ஆச்சு டைம் ஆச்சுனு நான் காட்டு கத்து கத்தினா கூட கிளம்பமாட்ட இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கரம் கிளம்பிட்ட? ஆபிஸ்ல எதாவது விசேஷமா?"
"ம் இன்னைக்கு என்ன நாள்?......... சம்பள நாள் அதான் இத்தன ஜோர்"
"ஆமா ல மறந்துட்டேன் உத்தி..... எனக்கு என்ன வாங்கி தருவ?"
"என்ன வேணும்?னு சொல்லு வாங்கி தரேன்...."
"அப்ப சரி கேட்டுகோ.........." என்று குதுகலமாய் பட்டியல் வாசித்தாள் அதை கேட்டவளுக்கு தலைசுத்த
"என்ன டி இது?"
" இது இப்ப போதும் உத்தி அப்பறம் மீதிய வாங்கிகறேன்"
"நீ சொல்லுறத பாத்த என் சம்பளமே மிஞ்சாது போலவே, இதையெல்லாம் உன்ன கட்டிகபோறவன் கிட்ட வாங்கிக்க தாயே"
"அவர்கிட்ட கேட்க இன்னும் நிறைவச்சிருக்கேன் இதமட்டும் சொல்ல சொல்லுறயே..."
"பாவம் டி அவன்" சோகமாய் சொல்ல இருவரும் வாய்விட்டு சிரித்தனர். கீர்த்திக்கு எதோ தோன்ற திரும்பினாள் கொஞ்சதூரத்தில் இவளையே பார்த்தபடி விக்கி வந்து கொண்டிருந்தான்.உதட்டை கடித்து வெட்கத்தால் சிவந்த கன்னங்களை சரி செய்ய முயன்று முடியாமல் தலைகுனிந்தாள். அதை பார்த்த உத்ரா அவள் கண் சென்ற திசை பார்த்துவிட்டு பார்காதது போல் திரும்பிகொண்டாள்.அருகில் வந்த விக்கி
"அப்படியென்ன சிரிப்பு என்கிட்ட சொன்னா நானும் சிரிப்பேன்ல"
"கீர்த்தி லிஸ்ட் கேட்டு தான் இந்த சிரிப்பு"
"என்ன லிஸ்ட்?"
"இன்னைக்கு சம்பள நாள் இல்ல அதுக்கு தான்"
"ஓ.......... உத்தி எனக்கு டிரிட் இல்லயா?"
"உங்க ரெண்டுபேருக்கும்............. ஒரு...... ஸ்பெஷல்ல்ல்ல்ல்ல் டிரிட் இருக்கு" என்று தலைசாய்த்து கண்சிமிட்டி கள்ள சிரிப்போன்றை உதிர்த்தாள்.அதை இருகண்கள் படமெடுத்து பத்திரபடுத்தியது.
"என்ன ட்ரிட்?"
"சாய்ந்தரம் ரெண்டுபேரும் என் ஆபிஸ் வந்துடுங்க, கீர்த்தி நான் அப்பா அம்மாகிட்ட நான் சொல்லிடேன் காலேஜ் முடிஞ்சதும் வந்திடு சரியா?"
" சரி"
"சரி" ரயில் வர ஏறியமர்ந்தனர்.ரயிலில் இன்று கூட்டம் அதிகமில்லை முவருக்கும் அமர இடம் கிடைத்தது.உத்ரா ஜன்னலோரத்திலும் அவள் அருகில் கீர்த்தியும், கீர்த்திக்கு நேரெதிராய் விக்கியும் அமர்ந்திருந்தனர். இருவரும் கண்ணோடு கண்பார்த்திருக்க இதை காணமல் கண்டுவிட்டு பார்வையை ஜன்னலின் வெளியே திரும்பினாள் உத்ரா.சில்லேன்ற காற்று முகத்தை தழுவி சென்றது.காலையில் தனக்கும் தன் தந்தைக்கும் நடந்த உரையாடலை நினைவுகூர்ந்தாள்.
காலையில் குழம்பிய முகத்தோடு வந்தவளை எதிர்பார்திருந்தது போல் தயாராயிருந்தார் மல்லிகார்ஜுன் இருவருமாய் நடக்க ஆரம்பித்தனர்.நிலவிய அமைதியை கலைத்த மல்லிகார்ஜுன்
"என்னமா பிரச்சனை?"
சிறிது நேரம் மவுனம் காத்துவிட்டு பின் ரிஷி - விஜி விஷயத்தை முழுவதுமாய் உரைத்தாள்.
"நான் செஞ்சது சரியா பா?"
"சரிதான் . விஜி ரிஷிய லவ் பண்றது நல்லா தெரியுது , ரிஷி வந்து பேசினா விஜி சரியாகிட போறா அப்பறமென்ன? "
"இல்ல பா எனக்கென்னா அத்தையும் மாமாவும் இதுக்கு சம்மதிப்பாங்களா?னு தெரியாம நான் அவள காதலிக்க தூண்ட்டனே னு இருக்கு"
"அப்படியேல்லாம் நினைக்காத கண்ணன எனக்கு தெரியும் உங்க ப்ரண்ஷிப் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே கம்பனிங்கள்ள பார்த்திருக்கோம் பொண்னோட விருப்பத்துக்கு தடை சொல்ல மாட்டாரு தவிர பையனும் நல்லவன் தானே?"
"நல்லவர் தான் பா அதுனால தான் நானும் அவங்கள மீட் பண்ண வைச்சேன்"
"இருந்தாலும் நான் எதுக்கும் விசாரிக்க சொல்லறேன், கண்ணன் கிட்டவும் பேசறேன் சரியா? நீ மனச போட்டு குழப்பிகாத" இன்னும் அவள் முகம் தெளிவடையாததை கண்டு
"இன்னும் வேற எதோ கூட இருக்கு போல என்னனு சொல்லு"
"என்னோட ஆபிஸ் ப்ரண்ட் ஒருத்தியோட தங்கச்சி அவளோட ப்ரண்ட் அ லவ் பண்ணறாளாம், நல்லவனாம் ஆனா அப்பா-அம்மா சம்மதிப்பாங்களானு தெரியல இப்ப என்ன பண்ணறது னு எங்கிட்ட கேட்டா பா"
"விக்கி னா எனக்கு சம்மதம்" விழிவிரித்து தன் தந்தையை பார்த்தாள்
"என்ன இவனுக்கு எப்படி தெரியும்னு பாக்கறீயா?"
"............."
"நானும் கீர்த்திய பார்த்துகிட்டு தானே இருக்கேன், அவ வயச கடந்து தான வந்திருகேன் எனக்கு தெரியாதா? தவிர எங்களுக்கு தெரியாம உனக்கு அவளோட அந்தரங்கள்ல சொல்லகூடிய அளவு deep friend யாரு இருக்க போறா அப்படி இருந்தா நீ சொல்லிருப்பயே உன் தங்கச்சி விஷயத்தையே உன்னால மறைக்க முடியலயே, அதவைச்சு தான் guess பண்ணேன் உன் கண்ணு கரக்டுனு சொல்லிடுச்சு"
தன் தந்தையின் புத்திகூர்மையை நினைத்து வியந்தவள்" அப்பா நான் பயந்துட்டேன் நீங்க என்ன சொல்லுவீங்களோனு"
"எதுக்கு பயம் நானும் உங்க அம்மாவும் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிகிட்டோம் எங்க பிள்ளைங்க காதலுக்கு மட்டும் தடை சொல்லிடுவோமா என்ன"
"Thanks you பா "
"இந்த thanks கீர்த்தி லவ்க்கு ஒகே சொன்னதுக்கா இல்ல உன் லவ் க்கும் ஒகே சொல்லுவேன் ங்கறதுனாலயா?"
"அப்பா...... எனக்கு அப்படி எண்ணம் இல்ல நீங்க யார சொல்லுறீங்களோ அவனுக்கு கழுத்த நீட்டிடுவேன்"
"அப்ப பாக்க ஆரம்பிச்சுட வேண்டியது தான்"
"அய்யோ அப்பா நான் இப்ப தான படிச்சு முடிச்சிருக்கேன் அதுகுள்ள எதுக்கு?"
"அதான் முடிச்சுடியே"
"கல்யாணத்துக்கு நான் இன்னும் mentally ரெடியாகல பா"
"சரி எப்ப ரெடி ஆவ?"
"அதெப்படி சொல்ல முடியும்"
"ஒன்னு செய்யலாம் இப்போ exam date fix பண்ணிடாங்கனு வை நீ உன் மனச அதுகாக ரெடி பண்ணிகுவ இல்ல அதுமாதிரி நாங்க கல்யாண தேதி fix பண்ணறோம் அதுகாக நீ உன் மனச ரெடி பண்ணிகோ சரியா?"
"ஆனா எப்படியும் convince பண்ணிடுவீங்க பா"
"அது தான எங்க வேல நல்லத convince பண்ணிகொடுக்கறதும் கெட்டத எப்படியாவது தடுக்கறதும் எங்க கடமை இல்ல யா"
பெருமையாக உணர்ந்தாள்.வீட்டிற்கு வந்து தன் தாயிடம் இதுபற்றி பேசினாள் அவரும் இதற்கு சரியேன்று விட துள்ளாத குறையாய் சந்தோஷித்தாள் கூடவே பெருமிதமும்
" I proud to be your child " என்றாள்
"நாங்க தான் பெரும படனும் எங்களுக்காக காதல மறைக்கறா ஒருத்தி, தங்கையோட காதலகூட அப்பா அம்மாகிட்ட பகிர்ந்துகறா ஒருத்தி இப்படி ரெண்டு பிள்ளைங்கள் பெற்றதுக்கு நாங்க தான் பெருமைபடனும் டா"என்று அணைத்து கொண்டனர்.
பாசம்தான் மனிதனை மனிதனாக இருக்க வைக்கிறது ஆனால் அது சில சமயங்களில் சிக்கலிலும் மாட்டிவிட்டுவிடுகிறது.இவர்களி
சற்றுமுன் தனக்கிருந்த மனநிலையையும் இப்போதிருக்கும் மனநிலையையும் ஒப்பிட்டு பார்த்தாள்.இந்த மாற்றதிற்கு காரணமான தன் தந்தையை பெருமையோடு பார்த்து புன்னகைத்தாள் அவளின் எண்ணம் புரிந்தவர் காலரை தூக்கிவிட்டு சிரிக்க அவளும் வாய்விட்டு சிரித்தாள்.ஏதோ பேசியபடி வீடுவந்து சேர்ந்தனர்.இருவரின் முகம் பார்த்தவரின் மனம் நிறைய புன்னகைத்தார் சரஸ்வதி.அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அலுவலகம் கிளம்பினாள் உத்ரா.என்றுமில்லாத அதிசயமாய் சீக்கிரம் ரயில்நிலையம் வந்திருந்தனர் இருவரும் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தபடி கீர்த்தி கேட்டாள்.
"டைம் ஆச்சு டைம் ஆச்சுனு நான் காட்டு கத்து கத்தினா கூட கிளம்பமாட்ட இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கரம் கிளம்பிட்ட? ஆபிஸ்ல எதாவது விசேஷமா?"
"ம் இன்னைக்கு என்ன நாள்?......... சம்பள நாள் அதான் இத்தன ஜோர்"
"ஆமா ல மறந்துட்டேன் உத்தி..... எனக்கு என்ன வாங்கி தருவ?"
"என்ன வேணும்?னு சொல்லு வாங்கி தரேன்...."
"அப்ப சரி கேட்டுகோ.........." என்று குதுகலமாய் பட்டியல் வாசித்தாள் அதை கேட்டவளுக்கு தலைசுத்த
"என்ன டி இது?"
" இது இப்ப போதும் உத்தி அப்பறம் மீதிய வாங்கிகறேன்"
"நீ சொல்லுறத பாத்த என் சம்பளமே மிஞ்சாது போலவே, இதையெல்லாம் உன்ன கட்டிகபோறவன் கிட்ட வாங்கிக்க தாயே"
"அவர்கிட்ட கேட்க இன்னும் நிறைவச்சிருக்கேன் இதமட்டும் சொல்ல சொல்லுறயே..."
"பாவம் டி அவன்" சோகமாய் சொல்ல இருவரும் வாய்விட்டு சிரித்தனர். கீர்த்திக்கு எதோ தோன்ற திரும்பினாள் கொஞ்சதூரத்தில் இவளையே பார்த்தபடி விக்கி வந்து கொண்டிருந்தான்.உதட்டை கடித்து வெட்கத்தால் சிவந்த கன்னங்களை சரி செய்ய முயன்று முடியாமல் தலைகுனிந்தாள். அதை பார்த்த உத்ரா அவள் கண் சென்ற திசை பார்த்துவிட்டு பார்காதது போல் திரும்பிகொண்டாள்.அருகில் வந்த விக்கி
"அப்படியென்ன சிரிப்பு என்கிட்ட சொன்னா நானும் சிரிப்பேன்ல"
"கீர்த்தி லிஸ்ட் கேட்டு தான் இந்த சிரிப்பு"
"என்ன லிஸ்ட்?"
"இன்னைக்கு சம்பள நாள் இல்ல அதுக்கு தான்"
"ஓ.......... உத்தி எனக்கு டிரிட் இல்லயா?"
"உங்க ரெண்டுபேருக்கும்............. ஒரு...... ஸ்பெஷல்ல்ல்ல்ல்ல் டிரிட் இருக்கு" என்று தலைசாய்த்து கண்சிமிட்டி கள்ள சிரிப்போன்றை உதிர்த்தாள்.அதை இருகண்கள் படமெடுத்து பத்திரபடுத்தியது.
"என்ன ட்ரிட்?"
"சாய்ந்தரம் ரெண்டுபேரும் என் ஆபிஸ் வந்துடுங்க, கீர்த்தி நான் அப்பா அம்மாகிட்ட நான் சொல்லிடேன் காலேஜ் முடிஞ்சதும் வந்திடு சரியா?"
" சரி"
"சரி" ரயில் வர ஏறியமர்ந்தனர்.ரயிலில் இன்று கூட்டம் அதிகமில்லை முவருக்கும் அமர இடம் கிடைத்தது.உத்ரா ஜன்னலோரத்திலும் அவள் அருகில் கீர்த்தியும், கீர்த்திக்கு நேரெதிராய் விக்கியும் அமர்ந்திருந்தனர். இருவரும் கண்ணோடு கண்பார்த்திருக்க இதை காணமல் கண்டுவிட்டு பார்வையை ஜன்னலின் வெளியே திரும்பினாள் உத்ரா.சில்லேன்ற காற்று முகத்தை தழுவி சென்றது.காலையில் தனக்கும் தன் தந்தைக்கும் நடந்த உரையாடலை நினைவுகூர்ந்தாள்.
காலையில் குழம்பிய முகத்தோடு வந்தவளை எதிர்பார்திருந்தது போல் தயாராயிருந்தார் மல்லிகார்ஜுன் இருவருமாய் நடக்க ஆரம்பித்தனர்.நிலவிய அமைதியை கலைத்த மல்லிகார்ஜுன்
"என்னமா பிரச்சனை?"
சிறிது நேரம் மவுனம் காத்துவிட்டு பின் ரிஷி - விஜி விஷயத்தை முழுவதுமாய் உரைத்தாள்.
"நான் செஞ்சது சரியா பா?"
"சரிதான் . விஜி ரிஷிய லவ் பண்றது நல்லா தெரியுது , ரிஷி வந்து பேசினா விஜி சரியாகிட போறா அப்பறமென்ன? "
"இல்ல பா எனக்கென்னா அத்தையும் மாமாவும் இதுக்கு சம்மதிப்பாங்களா?னு தெரியாம நான் அவள காதலிக்க தூண்ட்டனே னு இருக்கு"
"அப்படியேல்லாம் நினைக்காத கண்ணன எனக்கு தெரியும் உங்க ப்ரண்ஷிப் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே கம்பனிங்கள்ள பார்த்திருக்கோம் பொண்னோட விருப்பத்துக்கு தடை சொல்ல மாட்டாரு தவிர பையனும் நல்லவன் தானே?"
"நல்லவர் தான் பா அதுனால தான் நானும் அவங்கள மீட் பண்ண வைச்சேன்"
"இருந்தாலும் நான் எதுக்கும் விசாரிக்க சொல்லறேன், கண்ணன் கிட்டவும் பேசறேன் சரியா? நீ மனச போட்டு குழப்பிகாத" இன்னும் அவள் முகம் தெளிவடையாததை கண்டு
"இன்னும் வேற எதோ கூட இருக்கு போல என்னனு சொல்லு"
"என்னோட ஆபிஸ் ப்ரண்ட் ஒருத்தியோட தங்கச்சி அவளோட ப்ரண்ட் அ லவ் பண்ணறாளாம், நல்லவனாம் ஆனா அப்பா-அம்மா சம்மதிப்பாங்களானு தெரியல இப்ப என்ன பண்ணறது னு எங்கிட்ட கேட்டா பா"
"விக்கி னா எனக்கு சம்மதம்" விழிவிரித்து தன் தந்தையை பார்த்தாள்
"என்ன இவனுக்கு எப்படி தெரியும்னு பாக்கறீயா?"
"............."
"நானும் கீர்த்திய பார்த்துகிட்டு தானே இருக்கேன், அவ வயச கடந்து தான வந்திருகேன் எனக்கு தெரியாதா? தவிர எங்களுக்கு தெரியாம உனக்கு அவளோட அந்தரங்கள்ல சொல்லகூடிய அளவு deep friend யாரு இருக்க போறா அப்படி இருந்தா நீ சொல்லிருப்பயே உன் தங்கச்சி விஷயத்தையே உன்னால மறைக்க முடியலயே, அதவைச்சு தான் guess பண்ணேன் உன் கண்ணு கரக்டுனு சொல்லிடுச்சு"
தன் தந்தையின் புத்திகூர்மையை நினைத்து வியந்தவள்" அப்பா நான் பயந்துட்டேன் நீங்க என்ன சொல்லுவீங்களோனு"
"எதுக்கு பயம் நானும் உங்க அம்மாவும் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிகிட்டோம் எங்க பிள்ளைங்க காதலுக்கு மட்டும் தடை சொல்லிடுவோமா என்ன"
"Thanks you பா "
"இந்த thanks கீர்த்தி லவ்க்கு ஒகே சொன்னதுக்கா இல்ல உன் லவ் க்கும் ஒகே சொல்லுவேன் ங்கறதுனாலயா?"
"அப்பா...... எனக்கு அப்படி எண்ணம் இல்ல நீங்க யார சொல்லுறீங்களோ அவனுக்கு கழுத்த நீட்டிடுவேன்"
"அப்ப பாக்க ஆரம்பிச்சுட வேண்டியது தான்"
"அய்யோ அப்பா நான் இப்ப தான படிச்சு முடிச்சிருக்கேன் அதுகுள்ள எதுக்கு?"
"அதான் முடிச்சுடியே"
"கல்யாணத்துக்கு நான் இன்னும் mentally ரெடியாகல பா"
"சரி எப்ப ரெடி ஆவ?"
"அதெப்படி சொல்ல முடியும்"
"ஒன்னு செய்யலாம் இப்போ exam date fix பண்ணிடாங்கனு வை நீ உன் மனச அதுகாக ரெடி பண்ணிகுவ இல்ல அதுமாதிரி நாங்க கல்யாண தேதி fix பண்ணறோம் அதுகாக நீ உன் மனச ரெடி பண்ணிகோ சரியா?"
"ஆனா எப்படியும் convince பண்ணிடுவீங்க பா"
"அது தான எங்க வேல நல்லத convince பண்ணிகொடுக்கறதும் கெட்டத எப்படியாவது தடுக்கறதும் எங்க கடமை இல்ல யா"
பெருமையாக உணர்ந்தாள்.வீட்டிற்கு வந்து தன் தாயிடம் இதுபற்றி பேசினாள் அவரும் இதற்கு சரியேன்று விட துள்ளாத குறையாய் சந்தோஷித்தாள் கூடவே பெருமிதமும்
" I proud to be your child " என்றாள்
"நாங்க தான் பெரும படனும் எங்களுக்காக காதல மறைக்கறா ஒருத்தி, தங்கையோட காதலகூட அப்பா அம்மாகிட்ட பகிர்ந்துகறா ஒருத்தி இப்படி ரெண்டு பிள்ளைங்கள் பெற்றதுக்கு நாங்க தான் பெருமைபடனும் டா"என்று அணைத்து கொண்டனர்.
பாசம்தான் மனிதனை மனிதனாக இருக்க வைக்கிறது ஆனால் அது சில சமயங்களில் சிக்கலிலும் மாட்டிவிட்டுவிடுகிறது.இவர்களி
No comments:
Post a Comment