வீட்டில் நுழையும் போதே தன் தந்தையின் காலணியை கண்டுவிட்ட உத்ரா சந்தோஷத்தோடு "அப்பா....... அம்மா......" என்று கூவியபடியே உள்நுழைந்தாள்.எதையோ தீவிரமாக யோசித்துகொண்டிருந்தவர்கள் இவளின் குரலில் கலைந்து முன்றைக்கு வந்தனர்.கீர்த்திக்கு என்ன தோன்றியதோ ஓடிசென்று தந்தையும் தாயையும் கட்டிகொண்டவள் கண்கலங்கினாள்.மல்லிகார்ஜுன் அவள் தலையை மெதுவாக வருடிவிட அவரின் தோளில் சாய்ந்தபடி
"நான் செஞ்சது தப்பா பா?"
"இல்ல டா எங்க பொண்ணு தப்பு பண்ணுவாளா? ம்...... நல்ல பையன தான் செலக்ட் பண்ணிருக்க."
"இல்ல அக்காவே லவ் பண்ணாம இருக்கும் போது நான் மட்டும் இப்படி பண்ணது தப்புதான பா"
"இவ ஒரு லூசு இவளுக்கு தான் தோணலனா உனக்கும் அப்படி இருக்கனும்னு அவசியம் இல்லயே" என்று கீர்த்திக்கு சப்போர்ட் செய்தார் சரஸ்வதி.அதை கேட்ட உத்ரா
"அட கடவுளே! இதென்ன கொடுமை எல்லோரும் காதலிச்சா தான் திட்டுவாங்க இங்கென்ன னா லவ் பண்ணலனு திட்டறாங்களே இந்த அநியாயத்த கேட்டக யாருமே இல்லையா?" என்று சோகமாக கேட்க
"என்ன பண்ணறது சரசு உத்தி என்ன மாதிரி அப்பா........வி" என்று சப்போர்ட் செய்தார் மல்லிகார்ஜுன். அதற்கு சரஸ்வதி
"யாரு நீங்க அப்பாவியா? தனியாளா சண்டியர் மாதிரி வந்து எங்கப்பாக்கிட்ட பொண்ணு கேட்டவர் தான நீங்க?" என இவர்கள் இருவரும் அப்படியா என்பது போல பார்த்தனர்.ஆம் என்பது போல் அவர் கண்சிமிட்ட
"அம்மா அம்மா அப்பறம் என்னாச்சுனு சொல்லுங்க மா" குழந்தை போல் கொஞ்சினாள் உத்ரா. கதை கேட்கவும் சொல்லவும் வசதியாய் அமர்ந்துகொண்டு தங்களின் காதல் கதை சொல்ல ஆரம்பித்தார் சரஸ்வதி.
"அப்பாவ நீங்க எப்ப பார்தீங்க மா" உத்ரா கேட்டாள்.
"ம்..... நம்ம ஊர்ல காணும்பொங்கள் அன்னைக்கு ஆத்து திருநாள்னு ஒன்னு நடக்கும்.ஊரே அங்கதான் கூடி இருக்கும். எல்லோரும் காலைலயே எழுந்து வீட்டுல சமைச்சு கட்டி எடுத்துகிட்டு ஆத்துகிட்ட இருக்கற மைதானத்துக்கு வந்துடுவாங்க.அங்க உஞ்சல் கட்டி சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் வயதுவித்யாசம் இல்லாம உஞ்சல் ஆடி விளையாடுவாங்க.அதுமட்டுமில்லாம நிறைய விளையாட்டு இருக்கும் பெண்கள் ஒருபக்கமும் ஆண்கள் ஒருபக்கமும் விளையாடிகிட்டு இருப்பாங்க. இது போக வயசு பசங்க பொண்ணுங்களுக்குனு தனியா போட்டி கூட நடக்கும்.திருவிழவ விடகூட்டமா இருக்கும் நாங்க தொலைஞ்சு போகாம இருக்க எப்பவும் ப்ரண்ட்சோட தான் இருப்போம்.அங்க தான் உங்க அப்பாவ பார்த்தேன். நம்ம சத்தியராஜ் ஃபேன் ஆன உங்க அப்பா அதேமாதிரி hairstyle எல்லாம் பண்ணிகிட்டு கரும்பு உடைக்கற போட்டில 5 கரும்ப ஒன்னா உடச்சாரு பாரு........ , ஒரே கை தட்டல் மழை தான். அப்பறம் பாத்தா ஐயா எங்க பின்னாடியே சுத்திகிட்டு இருந்தாரு......."
"5 கரும்ப ஒன்னாவ எப்படி பா?" ஆச்சரியமாக கேட்டாள் கீர்த்தி.
"அப்ப எல்லாம் அவ்வளவு பலம் இருந்துச்சு டா"
"நீங்களும் அம்மாவ அங்க தான் பார்தீங்களா பா?" இது உத்ரா
"இல்ல நான் M.A கடலூர்ல படிச்சுகிட்டு இருந்தப்ப என் ப்ரண்ட் வெங்கடேஷ் கூட அடிகடி பண்ருட்டிக்கு வருவோம்.அவன் வீட்டு பக்கத்துல தான் உங்க அம்மா வீடும்.முதல் முறையா உங்க அம்மாவ பார்தப்ப ரெட்ட ஜடை போட்டுகிட்டு தாவணி போட்டுகிட்டு கழுத்துல ஒரே முத்துமாலை போட்டுகிட்டு சின்ன பொட்டு வைச்சுகிட்டு வேற எந்த மெக்கப்பும் இல்லாம அழகா கோவிலுக்கு போனா... அப்ப தான் உங்க அம்மாவ பார்த்தேன்...... . திருநாள்ள உங்கம்மா வ எதிர்பாக்கவே இல்ல தீடீர்னு வந்து முன்னாடி நின்னுட்டா......" என்று அந்த காலநினைவுகளில் பயணித்தபடியே சொன்னார்.
"அப்பறம்..........."
"அப்பறம் என்ன தினமும் எங்க வீட்டு வாசல தான் இருப்பாரு உங்க அப்பா..... நான் அப்பல்லாம் இவர மனசுக்குள்ள நல்லா திட்டுவேன். வந்துட்டான் பாரு வளந்துகெட்டவனு......"என்றார் சரஸ்வதி சிரித்தபடியே
"அப்பா நோட் திஸ் பாயின்ட் உங்கள எப்படியெல்லாம் திட்டிருங்காங்க பாருங்க பா" உத்ரா சொல்ல மல்லிகார்ஜுன்
"அவ கிடக்கறா குட்டச்சி" அவரை முறைத்து விட்டு தொடர்ந்தார் சரஸ்வதி
"அப்பறம் இந்த முஞ்சிய பாக்க பாக்க பிடிச்சு போச்சு , அப்பறம் உங்க அப்பா வந்து பொண்ணு கேட்டாரு எங்க அப்பாவுக்கு சம்மதம் தான்.ஆனா, எங்க அம்மாவுக்கும் கூடபிறந்தவங்களுக்கும் தான் சம்மதமில்ல அதனால அவங்க எதிர்த்துகிட்டு கல்யாணம் பண்ணிவைச்சாரு எங்க அப்பா. உங்க அப்பா வீட்டுலயும் யாருக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல. அதுனால நாங்க யாருக்கும் கஷ்டம் கொடுக்காம இந்த ஊருக்கு வந்து எங்க வாழ்க்கைய ஆரம்பிச்சுட்டோம். அன்னைல இருந்து நான் உங்க அப்பாவுக்கும் துணை எனக்கு உங்க அப்பா துணை , எங்க ரெண்டு பேருக்கும் இப்போ நீங்க துணை" என்றார் கண்கலங்கிய படி அவரை ஆதரவாய் தோளோடு அணைத்துகொண்டார் மல்லிகார்ஜுன்.எவ்வளவு கஷ்டத்தை இப்படி ஒன்றாய் இருந்து அனுபவித்திருப்பார்கள்,கடந்து வந்திருப்பார்கள் என்று புரிந்தது. தங்கள் பெற்றோரை போல் வாழவேண்டும் என்று தோன்றியது இரு பெண்களுக்கும்.சூழ்நிலையை மாற்றும் விதமாய் உத்ரா
"ஏன் சத்தியராஜ் மாதிரியா இருப்பீங்க?"
"ஹ்ம்ம்.... ஆமா காலேஜ் படிக்கறப்ப நான் சத்தியராஜ் ஃபேன், அதே மாதிரி hair style எல்லாம் வைச்சுகிட்டு இருப்பேன், நூறாவது நாள் சினிமா பாத்துட்டு மொட்ட அடிச்சு அதே மாதிரி கண்ணாடி வாங்கி போட்டுகிட்டு வீட்டுக்கு போனா என்ன யாருக்கும் அடையாலமே தெரியல அப்பறம் புரியவைக்கறதுகுள்ள போதும் போது ஆடுச்சு........ ஹா..ஹா..... முடி வளர வரைக்கும் சொல்லி சொல்லி தீட்டினாங்க வீட்டுல......."
எல்லோரும் கற்பனை செய்து பார்த்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தனர் (அடி படலயானு எல்லாம் கேட்க கூடாது சரியா?). உலகின் மொத்த சந்தோஷத்தையும் குத்தகை எடுத்தது போன்ற மனநிலையில் இருந்தாள் உத்ரா. ஆனால் அது மல்லிகார்ஜுன் அந்த விஷயத்தை சொல்லும் வரைதான்.
"நான் செஞ்சது தப்பா பா?"
"இல்ல டா எங்க பொண்ணு தப்பு பண்ணுவாளா? ம்...... நல்ல பையன தான் செலக்ட் பண்ணிருக்க."
"இல்ல அக்காவே லவ் பண்ணாம இருக்கும் போது நான் மட்டும் இப்படி பண்ணது தப்புதான பா"
"இவ ஒரு லூசு இவளுக்கு தான் தோணலனா உனக்கும் அப்படி இருக்கனும்னு அவசியம் இல்லயே" என்று கீர்த்திக்கு சப்போர்ட் செய்தார் சரஸ்வதி.அதை கேட்ட உத்ரா
"அட கடவுளே! இதென்ன கொடுமை எல்லோரும் காதலிச்சா தான் திட்டுவாங்க இங்கென்ன னா லவ் பண்ணலனு திட்டறாங்களே இந்த அநியாயத்த கேட்டக யாருமே இல்லையா?" என்று சோகமாக கேட்க
"என்ன பண்ணறது சரசு உத்தி என்ன மாதிரி அப்பா........வி" என்று சப்போர்ட் செய்தார் மல்லிகார்ஜுன். அதற்கு சரஸ்வதி
"யாரு நீங்க அப்பாவியா? தனியாளா சண்டியர் மாதிரி வந்து எங்கப்பாக்கிட்ட பொண்ணு கேட்டவர் தான நீங்க?" என இவர்கள் இருவரும் அப்படியா என்பது போல பார்த்தனர்.ஆம் என்பது போல் அவர் கண்சிமிட்ட
"அம்மா அம்மா அப்பறம் என்னாச்சுனு சொல்லுங்க மா" குழந்தை போல் கொஞ்சினாள் உத்ரா. கதை கேட்கவும் சொல்லவும் வசதியாய் அமர்ந்துகொண்டு தங்களின் காதல் கதை சொல்ல ஆரம்பித்தார் சரஸ்வதி.
"அப்பாவ நீங்க எப்ப பார்தீங்க மா" உத்ரா கேட்டாள்.
"ம்..... நம்ம ஊர்ல காணும்பொங்கள் அன்னைக்கு ஆத்து திருநாள்னு ஒன்னு நடக்கும்.ஊரே அங்கதான் கூடி இருக்கும். எல்லோரும் காலைலயே எழுந்து வீட்டுல சமைச்சு கட்டி எடுத்துகிட்டு ஆத்துகிட்ட இருக்கற மைதானத்துக்கு வந்துடுவாங்க.அங்க உஞ்சல் கட்டி சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் வயதுவித்யாசம் இல்லாம உஞ்சல் ஆடி விளையாடுவாங்க.அதுமட்டுமில்லாம நிறைய விளையாட்டு இருக்கும் பெண்கள் ஒருபக்கமும் ஆண்கள் ஒருபக்கமும் விளையாடிகிட்டு இருப்பாங்க. இது போக வயசு பசங்க பொண்ணுங்களுக்குனு தனியா போட்டி கூட நடக்கும்.திருவிழவ விடகூட்டமா இருக்கும் நாங்க தொலைஞ்சு போகாம இருக்க எப்பவும் ப்ரண்ட்சோட தான் இருப்போம்.அங்க தான் உங்க அப்பாவ பார்த்தேன். நம்ம சத்தியராஜ் ஃபேன் ஆன உங்க அப்பா அதேமாதிரி hairstyle எல்லாம் பண்ணிகிட்டு கரும்பு உடைக்கற போட்டில 5 கரும்ப ஒன்னா உடச்சாரு பாரு........ , ஒரே கை தட்டல் மழை தான். அப்பறம் பாத்தா ஐயா எங்க பின்னாடியே சுத்திகிட்டு இருந்தாரு......."
"5 கரும்ப ஒன்னாவ எப்படி பா?" ஆச்சரியமாக கேட்டாள் கீர்த்தி.
"அப்ப எல்லாம் அவ்வளவு பலம் இருந்துச்சு டா"
"நீங்களும் அம்மாவ அங்க தான் பார்தீங்களா பா?" இது உத்ரா
"இல்ல நான் M.A கடலூர்ல படிச்சுகிட்டு இருந்தப்ப என் ப்ரண்ட் வெங்கடேஷ் கூட அடிகடி பண்ருட்டிக்கு வருவோம்.அவன் வீட்டு பக்கத்துல தான் உங்க அம்மா வீடும்.முதல் முறையா உங்க அம்மாவ பார்தப்ப ரெட்ட ஜடை போட்டுகிட்டு தாவணி போட்டுகிட்டு கழுத்துல ஒரே முத்துமாலை போட்டுகிட்டு சின்ன பொட்டு வைச்சுகிட்டு வேற எந்த மெக்கப்பும் இல்லாம அழகா கோவிலுக்கு போனா... அப்ப தான் உங்க அம்மாவ பார்த்தேன்...... . திருநாள்ள உங்கம்மா வ எதிர்பாக்கவே இல்ல தீடீர்னு வந்து முன்னாடி நின்னுட்டா......" என்று அந்த காலநினைவுகளில் பயணித்தபடியே சொன்னார்.
"அப்பறம்..........."
"அப்பறம் என்ன தினமும் எங்க வீட்டு வாசல தான் இருப்பாரு உங்க அப்பா..... நான் அப்பல்லாம் இவர மனசுக்குள்ள நல்லா திட்டுவேன். வந்துட்டான் பாரு வளந்துகெட்டவனு......"என்றார் சரஸ்வதி சிரித்தபடியே
"அப்பா நோட் திஸ் பாயின்ட் உங்கள எப்படியெல்லாம் திட்டிருங்காங்க பாருங்க பா" உத்ரா சொல்ல மல்லிகார்ஜுன்
"அவ கிடக்கறா குட்டச்சி" அவரை முறைத்து விட்டு தொடர்ந்தார் சரஸ்வதி
"அப்பறம் இந்த முஞ்சிய பாக்க பாக்க பிடிச்சு போச்சு , அப்பறம் உங்க அப்பா வந்து பொண்ணு கேட்டாரு எங்க அப்பாவுக்கு சம்மதம் தான்.ஆனா, எங்க அம்மாவுக்கும் கூடபிறந்தவங்களுக்கும் தான் சம்மதமில்ல அதனால அவங்க எதிர்த்துகிட்டு கல்யாணம் பண்ணிவைச்சாரு எங்க அப்பா. உங்க அப்பா வீட்டுலயும் யாருக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல. அதுனால நாங்க யாருக்கும் கஷ்டம் கொடுக்காம இந்த ஊருக்கு வந்து எங்க வாழ்க்கைய ஆரம்பிச்சுட்டோம். அன்னைல இருந்து நான் உங்க அப்பாவுக்கும் துணை எனக்கு உங்க அப்பா துணை , எங்க ரெண்டு பேருக்கும் இப்போ நீங்க துணை" என்றார் கண்கலங்கிய படி அவரை ஆதரவாய் தோளோடு அணைத்துகொண்டார் மல்லிகார்ஜுன்.எவ்வளவு கஷ்டத்தை இப்படி ஒன்றாய் இருந்து அனுபவித்திருப்பார்கள்,கடந்து வந்திருப்பார்கள் என்று புரிந்தது. தங்கள் பெற்றோரை போல் வாழவேண்டும் என்று தோன்றியது இரு பெண்களுக்கும்.சூழ்நிலையை மாற்றும் விதமாய் உத்ரா
"ஏன் சத்தியராஜ் மாதிரியா இருப்பீங்க?"
"ஹ்ம்ம்.... ஆமா காலேஜ் படிக்கறப்ப நான் சத்தியராஜ் ஃபேன், அதே மாதிரி hair style எல்லாம் வைச்சுகிட்டு இருப்பேன், நூறாவது நாள் சினிமா பாத்துட்டு மொட்ட அடிச்சு அதே மாதிரி கண்ணாடி வாங்கி போட்டுகிட்டு வீட்டுக்கு போனா என்ன யாருக்கும் அடையாலமே தெரியல அப்பறம் புரியவைக்கறதுகுள்ள போதும் போது ஆடுச்சு........ ஹா..ஹா..... முடி வளர வரைக்கும் சொல்லி சொல்லி தீட்டினாங்க வீட்டுல......."
எல்லோரும் கற்பனை செய்து பார்த்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தனர் (அடி படலயானு எல்லாம் கேட்க கூடாது சரியா?). உலகின் மொத்த சந்தோஷத்தையும் குத்தகை எடுத்தது போன்ற மனநிலையில் இருந்தாள் உத்ரா. ஆனால் அது மல்லிகார்ஜுன் அந்த விஷயத்தை சொல்லும் வரைதான்.
No comments:
Post a Comment