சரண் உத்ராவின் அறைக்கதவை தட்டினான், திறந்தவள் அவனைப்பார்த்ததும் மறுபடியும் மூடிகொள்ள முற்பட கைவைத்து தடுத்தவன்
" உத்தி ப்ளிஸ் நான் சொல்லுறத கொஞ்சம் கேளேன்........" என்று அவன் கெஞ்சிகொண்டிருக்க தன் பலம் முழுவதுமாய் உபயோகித்து கதவை சாத்தியவள், அப்படியே சரிந்து அமர்ந்து அழலானாள்.
இங்கிருந்து கதவை தட்டிகொண்டிருந்தால் பார்ப்பவர்கள் தவறாக நினைக்கலாம் என்று நினைத்தவன் தன்னறைக்கு சென்று உத்ராவை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றான். ஆனால் அவள் அதை ஏற்கவில்லை.பல முறை முயற்சி செய்தவன் சோர்ந்துபோய் கட்டிலில் அமர்ந்தான்.அவன் அழைக்காமலே அன்றய நினைவுகள் கண்முன் விரிந்தன.
அன்று பிராபாவதி விஜியிடம் பேசுமாறு அனுப்பிவைக்க சென்றவன் கண்டது, போனில் பேசிகொண்டிருந்தவள் உத்ரா பெயர்கேட்கவும் கண்களில் நீர்கோர்க்க பேசியவளை தான். சரண் அருகில் சென்று என்னவென்று விசாரிக்க, அப்போது அவளுக்கும் அனைத்தையும் சொல்ல ஒருவர் வேண்டுமென்ற நிலையில் அனைத்தையும் சொல்லிமுடித்தாள். சொல்லும்போது அவளுக்கு தெரியவில்லை இருவரின் சந்தோஷத்தை குலைக்கபோகிறோம் என்று. அவள் செய்த தவறு தன் யூகத்தை உண்மையென்று சொன்னது தான். முதலில் அவ்வாறு இருக்காது என்று நினைத்தவன் பின் முழுவதும் உண்மையென்றே நம்பினான்.அவனுக்கு கோபம் வந்தது ரிஷியை எப்படி காதலிக்கலாம் என்று. விஜிக்கு எதோ வாயில் வந்த சமாதனத்தை சொல்லிவிட்டு வந்துவிட்டான்.என்ன செய்தும் அவனது கோபம் மட்டுபடவில்லை.
மாலையில் விக்கியோடு உத்ரா வந்து நிற்கவும் கோபம் அதிகமாக அதை அப்படியே அவளிடம் காட்டியும் விட்டான். உண்மையில் உத்ராவோடு வந்தது ரிஷி என்று தான் நினைத்திருந்தான் , அவள் அறிமுகப்படுத்தும் போது தான் உண்மை புரிந்தது.ஏற்கனவே தன்னை உத்ரா மிகவும் பாதிக்கிறாள் என்று அவன் உணர்ந்தே தான் இருந்தான், ஆனால் தன்னால் அவளை ஒரு கணமும் வெறுக்கமுடியாது என்று பின் வந்த நாட்களில் நன்றாகவே புரிந்து கொண்டான். அதனால் தான் கண்ணன் சொன்னதும் எதற்கும் கேட்கடுமே என்று அவரிடம் தன் மனதினை சொல்லி வைத்தான். அவள் சம்மதம் சொன்னது அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏன் என்று யோசிக்க ஆரம்பித்தான் அவனது விதி எல்லாவற்றையும் தவறாகவே யோசித்தான்.விஜி உத்ராவிடம் பேசிவிட்டு முதலில் போன் செய்தது சரணுக்கு தான், உத்ரா ரிஷியை காதலிக்கவில்லை ரிஷி தான் உத்ராவை காதலித்திருக்கவேண்டும் என்று சொன்னாள், விஜியிடம் சரியென்று விட்டு தன் சந்தேகங்களை மனதில் புதைத்தான்.அது தான் அன்று உத்ராவின் மனதினை உடைத்திட பூகம்பமாய் வந்துவிட்டது.
அன்று அவன் நண்பர்களின் வற்புறுத்தலால் மது அருந்தியவனின் கண்ணில் சிரித்துகொண்டிருந்த உத்ராவும், ஏக்கத்தோடு இருந்த விஜியும் பட்டுதொலைத்தனர். முதலில் தன் மனதை கட்டு படுத்தி அவளை அழைத்தவன், அவள் மாடிக்கு வந்ததும் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா?, உனக்கு என்னை பிடித்திருக்கிறதா? என்று தான் கேட்டான். சிந்தையில் இருந்த உத்ராவின் காதுகளில் அவனது கேள்வி விழுகாமல் போக வந்தது பிரச்சனை. அதுவே அவனுக்கு கோபத்தை அதிகபடுத்த வாய்க்குவந்தபடி பேசிவிட்டான். இப்போது அதற்காய் கவலைபடுகிறான். ஒரு பெருமூச்சோடு எழுந்தவன் அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்தான்
" உத்தி ப்ளிஸ் நான் சொல்லுறத கொஞ்சம் கேளேன்........" என்று அவன் கெஞ்சிகொண்டிருக்க தன் பலம் முழுவதுமாய் உபயோகித்து கதவை சாத்தியவள், அப்படியே சரிந்து அமர்ந்து அழலானாள்.
இங்கிருந்து கதவை தட்டிகொண்டிருந்தால் பார்ப்பவர்கள் தவறாக நினைக்கலாம் என்று நினைத்தவன் தன்னறைக்கு சென்று உத்ராவை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றான். ஆனால் அவள் அதை ஏற்கவில்லை.பல முறை முயற்சி செய்தவன் சோர்ந்துபோய் கட்டிலில் அமர்ந்தான்.அவன் அழைக்காமலே அன்றய நினைவுகள் கண்முன் விரிந்தன.
அன்று பிராபாவதி விஜியிடம் பேசுமாறு அனுப்பிவைக்க சென்றவன் கண்டது, போனில் பேசிகொண்டிருந்தவள் உத்ரா பெயர்கேட்கவும் கண்களில் நீர்கோர்க்க பேசியவளை தான். சரண் அருகில் சென்று என்னவென்று விசாரிக்க, அப்போது அவளுக்கும் அனைத்தையும் சொல்ல ஒருவர் வேண்டுமென்ற நிலையில் அனைத்தையும் சொல்லிமுடித்தாள். சொல்லும்போது அவளுக்கு தெரியவில்லை இருவரின் சந்தோஷத்தை குலைக்கபோகிறோம் என்று. அவள் செய்த தவறு தன் யூகத்தை உண்மையென்று சொன்னது தான். முதலில் அவ்வாறு இருக்காது என்று நினைத்தவன் பின் முழுவதும் உண்மையென்றே நம்பினான்.அவனுக்கு கோபம் வந்தது ரிஷியை எப்படி காதலிக்கலாம் என்று. விஜிக்கு எதோ வாயில் வந்த சமாதனத்தை சொல்லிவிட்டு வந்துவிட்டான்.என்ன செய்தும் அவனது கோபம் மட்டுபடவில்லை.
மாலையில் விக்கியோடு உத்ரா வந்து நிற்கவும் கோபம் அதிகமாக அதை அப்படியே அவளிடம் காட்டியும் விட்டான். உண்மையில் உத்ராவோடு வந்தது ரிஷி என்று தான் நினைத்திருந்தான் , அவள் அறிமுகப்படுத்தும் போது தான் உண்மை புரிந்தது.ஏற்கனவே தன்னை உத்ரா மிகவும் பாதிக்கிறாள் என்று அவன் உணர்ந்தே தான் இருந்தான், ஆனால் தன்னால் அவளை ஒரு கணமும் வெறுக்கமுடியாது என்று பின் வந்த நாட்களில் நன்றாகவே புரிந்து கொண்டான். அதனால் தான் கண்ணன் சொன்னதும் எதற்கும் கேட்கடுமே என்று அவரிடம் தன் மனதினை சொல்லி வைத்தான். அவள் சம்மதம் சொன்னது அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏன் என்று யோசிக்க ஆரம்பித்தான் அவனது விதி எல்லாவற்றையும் தவறாகவே யோசித்தான்.விஜி உத்ராவிடம் பேசிவிட்டு முதலில் போன் செய்தது சரணுக்கு தான், உத்ரா ரிஷியை காதலிக்கவில்லை ரிஷி தான் உத்ராவை காதலித்திருக்கவேண்டும் என்று சொன்னாள், விஜியிடம் சரியென்று விட்டு தன் சந்தேகங்களை மனதில் புதைத்தான்.அது தான் அன்று உத்ராவின் மனதினை உடைத்திட பூகம்பமாய் வந்துவிட்டது.
அன்று அவன் நண்பர்களின் வற்புறுத்தலால் மது அருந்தியவனின் கண்ணில் சிரித்துகொண்டிருந்த உத்ராவும், ஏக்கத்தோடு இருந்த விஜியும் பட்டுதொலைத்தனர். முதலில் தன் மனதை கட்டு படுத்தி அவளை அழைத்தவன், அவள் மாடிக்கு வந்ததும் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா?, உனக்கு என்னை பிடித்திருக்கிறதா? என்று தான் கேட்டான். சிந்தையில் இருந்த உத்ராவின் காதுகளில் அவனது கேள்வி விழுகாமல் போக வந்தது பிரச்சனை. அதுவே அவனுக்கு கோபத்தை அதிகபடுத்த வாய்க்குவந்தபடி பேசிவிட்டான். இப்போது அதற்காய் கவலைபடுகிறான். ஒரு பெருமூச்சோடு எழுந்தவன் அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்தான்
No comments:
Post a Comment