"எனக்கு மனைவினா அது கீர்த்தி மட்டும் தான் அதுவும் நீ, அத்த , மாமா சம்மதத்தோடுதான்" என்றவனின் குரலில் இருந்த உறுதியும் கீர்த்தியின் கண்களில் இருந்த உறுதியும் உத்ரா கண்களை பனிக்க செய்தன.
மனமோ எத்தகைய மனம் இவர்களுக்கு "ஆமா காதலிக்கறோம்,அதுல என்ன தப்பு? நீங்க சம்மதிச்சா மண்டபத்துல கல்யாணம் இல்லைனா Register officeல கல்யாணம் " என்று சொல்லும் இந்த தலைமுறையில் " காதலிக்கறோம் ஆனா நீங்க சம்மதிச்சா தான் எங்க கல்யாணம்" என்று சொல்லும் இவர்களை நினைத்து நெகிழ்ந்தது.உள்ளம் உவகையுற கண்களில் நீரோடும் உதட்டில் சிரிப்போடும்
"எப்போ கல்யாணம் னு தானே கேட்டேன், எப்படி காதலிக்கலாம்னா கேட்டேன்?" என்றாள்.
முதலில் உத்ரா சொன்னதை புரிந்துகொண்டு குதுகலித்து விக்கிக்கும் கீர்த்திக்கும் தன் மனம்நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்தது விஜி தான்.காதல் வென்ற மகிழ்ச்சியில் அனைத்தையும் மறந்து பழைய விஜியாய் மாறி இருந்தாள் அந்நேரம். விக்கிக்கும் கீர்த்திக்கும் இன்னும் ஒன்றுமே புரியவில்லை எதற்காக வாழ்த்துகிறாள் என்பது கூட புரியாமல் அமர்ந்திருந்தனர்.அதை பார்த்த விஜி சிரித்தபடி உத்ராவிடம்
"ஏய் லூசு பாரு நீ குடுத்த ஷாக்ல ரெண்டுபேரும் எப்படி உட்காந்திருக்காங்கனு, ஒரு நிமிஷம் எல்லோரையும் எப்படி கலங்கடிச்சுட்ட? குரங்கே" என
உத்ராவின் கண்கள் வியப்பையும் ஏக்கத்தை ஒருங்கே பிரதிபலித்தன. "எத்தனை நாளாயிற்று நீ இப்படி என்னிடம் பேசி" என்ற கேள்வியை கண்களின் வழியே கேட்டாள். அவள் அதை பார்த்தால் தானே சந்தோஷத்தில் அவள் அதை படிக்கவில்லை இவர்கள் இருவரை தான் பார்த்து கொண்டிருந்தாள்.சந்தோஷம் மிகுதியாக விக்கி,கீர்த்தியை பார்த்து வாய்விட்டு சிரித்தாள்.அவளின் சிரிப்பும் விஜியின் கேள்வியும் இவர்களுக்கு உத்ரா சொன்னதை உணர்த்த இருவரும் விவரிக்க முடியாத சந்தோஷத்தில் இருந்தனர்.கீர்த்தி உத்ராவின் தோளில் சாய்ந்து
"அக்கா தாங்க்ஸ் டி பயந்துட்டேன் தெரியுமா?" என்றாள்.
"அப்படியா நீயா பயப்படுவ? பக்கதுல நான் இருகேனு ஒரு பயமே இல்லாம என்னமா லுக்கு விட்ட இப்ப பயந்துட்டேன் சொன்னா நம்பிடுவேனா?"
" ச்சீ போடி " வெட்கபட விஜி உத்ராவும் கை தட்டி விக்கிக்கு கை கொடுத்து ஆரவாரபடுத்தினர்
"விக்கி நீ ஜெய்ச்சுட்ட போ கீர்த்தியவே வெக்கபட வைச்சுடயே பெரிய ஆளு டா நீ" என்றாள் உத்ரா.கீர்த்தி அவளை முறைக்க விக்கியும் விஜியும் சிரித்தனர் .
"முறைக்காதே தாயே விக்கி ஒரு லுக் விடு அமைதியாகிடுவா" என அதற்கும் சிரிப்பலை அடித்தது அங்கு.சூழ்நிலை இலகுவாக விக்கி கீர்த்தி இருவரும் உத்ராவிற்கு நன்றி கூறினர்.காலையில் அவளும் மல்லிகார்ஜுனும் பேசி கொண்டதன் பின் பகுதியை மட்டும் விளக்கி கூறினாள்.
விக்கியின் மனம் நெகிழ்ந்தது காதலிப்பவர்களை தவறு செய்பவர்களாய் பார்க்கும் இந்த காலத்தில் தங்கையின் காதலுக்காக அன்னை தந்தையிடம் பேசும் தமக்கையையும், மகளின் காதலை கண்டும் கோபம் கொள்ளாமல் சேர்த்து வைக்க நினைக்கும் பெற்றோரையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. தனக்கு எந்த தைரியத்தில் பெண் குடுக்க முன் வருகிறார்கள்'யாருமில்லாத ஒருவன் வேலையிருக்கிறது ஆனால் சேமிப்பு ஏதுமில்லை சொந்தங்கள் கூட இல்லை பின் எப்படி' என்று தோன்றியது அவனுக்கு.மறைக்காமல் அதை கேட்டும் விட்டான்.உத்ரா புன்னகைத்து
"எனக்கு என் நண்பனிடத்தில் உள்ள நம்பிக்கை தான் காரணம், அம்மா அப்பா கு எப்படினு தெரியல ஆனா என்னோட guessing அப்பாவும் அதே நம்பிக்கைல தான் சரினு சொல்லிருக்கனும்.மீதிய நீயே கேட்டு தெரிஞ்சுக்கோ" என்றாள் ஒரே சென்டிமென்ட் காட்சி ஒடி கொண்டிருக்க விஜி
"சப்ரைஸ்னு சொன்னது இது தானா?"
"அ........ஆ....ஆமா, விக்கி நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே" பேச்சை மாற்றினாள்.
"என்ன கேட்ட?"
"எப்போ கல்யாணம்?"
"கீர்த்தி படிப்பு முடிஞ்சதுக்கப்பறம்"
"ம் ........ம்....... சரி கீர்த்தி எப்படியாவது இந்த செமஸ்டரோட தொல்லைகெல்லாம் ஒரு முற்று புள்ளி வைக்கலாம்னு பார்த்தா விடமாட்ட போல" என்றாள் விஜி
"அதெல்லாம் இல்ல நான் படிக்கனும்னு தான் நினைக்கறேன்" என்றாள் கீர்த்தி
"ஆனா, பாவம் டா நீ" என்றாள் உத்ரா சோகத்தோடு
"ஏன் டி"
"பின்ன காலைல 8.00 மணிக்கு பெட் காபியோட எழுப்பினா தான் இவ எழுந்தரிப்பா, அதுமட்டும் இல்ல சுடுதண்ணி, காபி இந்த மாதிரி பெரிய வேலை மட்டும் தான் அவளுக்கு செய்ய தெரியும் , சம்பார், சாப்பாடுனு சின்ன வேலையெல்லாம் தெரியாது"
"அதுனால என்ன நான் காலைல எழுந்து காபி போட்டு அவள எழுப்பிட்டு போறேன்.. அவளுக்கு சமையல் தெரியாட்டி என்ன? நான் செஞ்சுட்டு போறேன்" என விஜியும் உத்ராவும் சேர்ந்து ஒரு கரகோஷம் எழுப்பினர்.
"இப்பவே பாதி பொண்டாடி தாசானா மாறிட்ட டா கல்யாணத்துகப்பறம் கீர்த்திதாசன் பேர மாத்திகூட வைச்சுக்குவ போல" என்றாள் விஜி
"இப்பவே அத செய்லாம்னு இருகேன்" என இருவரும் சிரிக்க கீர்த்தி அவனை முறைத்து
"போதும் போதும் ரொம்ப வழியுது" என்றாள்.
"அழகு தானே செல்லம்"
"ம்........ இது வேறயா ஆசை தான் , முகத்த கண்ணாடி பார்கறதேயில்ல போல"
"தினமும் பார்கறனே நீ மன்மதன் னு தான் சொல்லுது கண்ணாடி"
"சொன்னாங்க சொன்னாங்க"
"யாரு அந்த பக்கத்து சீட் ல உட்காருந்திருக்கே அந்த மாதவி பொண்ணு தான" என்று சுட்டிகாட்டினான்.
"ஓ ...... அதுகுள்ள பேரெல்லாம் தெரிஞ்சுகிட்டாச்சா?"
"ம்........ அந்த பொண்ணு தான் சொன்னுச்சு"
"வேறயென்ன சொன்னா அவ?"
"நான் ரொம்ப அழகு........ என்ன எப்பவும் பாத்திகிட்டே இருக்கலாம்னு சொன்னா அதுமட்டுமா எப்ப கல்யாணம் பண்ணிகலாம்னு? வேற கேட்டா சொல்லு நான் என்ன சொல்லட்டும்"
"ஏன் சரினு சொல்லுங்களேன்...... எனக்கேன்ன?" சொல்லி முடிப்பதற்குள் தொண்டை அடைக்க கண்களில் குளம்கட்டியது. அவளருகில் நெருங்கி அமர்ந்தவன்
"ஏய் சும்மா வம்பிழுத்தேன் டா இதுக்கு போய் அழலாமா?..........ம்....... கண்ண துடச்சுக்க டா....... உன்ன தவிர நான் யாரயாவது பார்பேனா "
"இல்ல பார்த்து தான் பாருக்களேன்?" என இருவரும் ஒன்று சேர்ந்து சிரித்தனர். இருவரும் நிமிர்ந்தால் விஜியையும் உத்ராவையும் காணவில்லை எங்கே போனார்கள் தேடினர் சிறிது நேரத்தில் இருவரும் ஐஸ்கிரீமுடன் வந்து சேர்ந்தனர்.
"எங்க டி போனிங்க?"
"இல்ல பா நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தீங்க அதான் நாங்க அப்படியே நடந்துட்டு வந்தோம் அப்பறம் தனியா பேசவிடறாங்களா பாருனு மனசுக்குள்ள திட்டுவீங்க எங்களுக்கு தேவையா? என்ன உத்தி"
"அதானே" என அவளும் ஆமோதிக்க சிரித்தபடி அனைவரும் வீடுவந்து சேர்ந்தனர்.
மனமோ எத்தகைய மனம் இவர்களுக்கு "ஆமா காதலிக்கறோம்,அதுல என்ன தப்பு? நீங்க சம்மதிச்சா மண்டபத்துல கல்யாணம் இல்லைனா Register officeல கல்யாணம் " என்று சொல்லும் இந்த தலைமுறையில் " காதலிக்கறோம் ஆனா நீங்க சம்மதிச்சா தான் எங்க கல்யாணம்" என்று சொல்லும் இவர்களை நினைத்து நெகிழ்ந்தது.உள்ளம் உவகையுற கண்களில் நீரோடும் உதட்டில் சிரிப்போடும்
"எப்போ கல்யாணம் னு தானே கேட்டேன், எப்படி காதலிக்கலாம்னா கேட்டேன்?" என்றாள்.
முதலில் உத்ரா சொன்னதை புரிந்துகொண்டு குதுகலித்து விக்கிக்கும் கீர்த்திக்கும் தன் மனம்நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்தது விஜி தான்.காதல் வென்ற மகிழ்ச்சியில் அனைத்தையும் மறந்து பழைய விஜியாய் மாறி இருந்தாள் அந்நேரம். விக்கிக்கும் கீர்த்திக்கும் இன்னும் ஒன்றுமே புரியவில்லை எதற்காக வாழ்த்துகிறாள் என்பது கூட புரியாமல் அமர்ந்திருந்தனர்.அதை பார்த்த விஜி சிரித்தபடி உத்ராவிடம்
"ஏய் லூசு பாரு நீ குடுத்த ஷாக்ல ரெண்டுபேரும் எப்படி உட்காந்திருக்காங்கனு, ஒரு நிமிஷம் எல்லோரையும் எப்படி கலங்கடிச்சுட்ட? குரங்கே" என
உத்ராவின் கண்கள் வியப்பையும் ஏக்கத்தை ஒருங்கே பிரதிபலித்தன. "எத்தனை நாளாயிற்று நீ இப்படி என்னிடம் பேசி" என்ற கேள்வியை கண்களின் வழியே கேட்டாள். அவள் அதை பார்த்தால் தானே சந்தோஷத்தில் அவள் அதை படிக்கவில்லை இவர்கள் இருவரை தான் பார்த்து கொண்டிருந்தாள்.சந்தோஷம் மிகுதியாக விக்கி,கீர்த்தியை பார்த்து வாய்விட்டு சிரித்தாள்.அவளின் சிரிப்பும் விஜியின் கேள்வியும் இவர்களுக்கு உத்ரா சொன்னதை உணர்த்த இருவரும் விவரிக்க முடியாத சந்தோஷத்தில் இருந்தனர்.கீர்த்தி உத்ராவின் தோளில் சாய்ந்து
"அக்கா தாங்க்ஸ் டி பயந்துட்டேன் தெரியுமா?" என்றாள்.
"அப்படியா நீயா பயப்படுவ? பக்கதுல நான் இருகேனு ஒரு பயமே இல்லாம என்னமா லுக்கு விட்ட இப்ப பயந்துட்டேன் சொன்னா நம்பிடுவேனா?"
" ச்சீ போடி " வெட்கபட விஜி உத்ராவும் கை தட்டி விக்கிக்கு கை கொடுத்து ஆரவாரபடுத்தினர்
"விக்கி நீ ஜெய்ச்சுட்ட போ கீர்த்தியவே வெக்கபட வைச்சுடயே பெரிய ஆளு டா நீ" என்றாள் உத்ரா.கீர்த்தி அவளை முறைக்க விக்கியும் விஜியும் சிரித்தனர் .
"முறைக்காதே தாயே விக்கி ஒரு லுக் விடு அமைதியாகிடுவா" என அதற்கும் சிரிப்பலை அடித்தது அங்கு.சூழ்நிலை இலகுவாக விக்கி கீர்த்தி இருவரும் உத்ராவிற்கு நன்றி கூறினர்.காலையில் அவளும் மல்லிகார்ஜுனும் பேசி கொண்டதன் பின் பகுதியை மட்டும் விளக்கி கூறினாள்.
விக்கியின் மனம் நெகிழ்ந்தது காதலிப்பவர்களை தவறு செய்பவர்களாய் பார்க்கும் இந்த காலத்தில் தங்கையின் காதலுக்காக அன்னை தந்தையிடம் பேசும் தமக்கையையும், மகளின் காதலை கண்டும் கோபம் கொள்ளாமல் சேர்த்து வைக்க நினைக்கும் பெற்றோரையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. தனக்கு எந்த தைரியத்தில் பெண் குடுக்க முன் வருகிறார்கள்'யாருமில்லாத ஒருவன் வேலையிருக்கிறது ஆனால் சேமிப்பு ஏதுமில்லை சொந்தங்கள் கூட இல்லை பின் எப்படி' என்று தோன்றியது அவனுக்கு.மறைக்காமல் அதை கேட்டும் விட்டான்.உத்ரா புன்னகைத்து
"எனக்கு என் நண்பனிடத்தில் உள்ள நம்பிக்கை தான் காரணம், அம்மா அப்பா கு எப்படினு தெரியல ஆனா என்னோட guessing அப்பாவும் அதே நம்பிக்கைல தான் சரினு சொல்லிருக்கனும்.மீதிய நீயே கேட்டு தெரிஞ்சுக்கோ" என்றாள் ஒரே சென்டிமென்ட் காட்சி ஒடி கொண்டிருக்க விஜி
"சப்ரைஸ்னு சொன்னது இது தானா?"
"அ........ஆ....ஆமா, விக்கி நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே" பேச்சை மாற்றினாள்.
"என்ன கேட்ட?"
"எப்போ கல்யாணம்?"
"கீர்த்தி படிப்பு முடிஞ்சதுக்கப்பறம்"
"ம் ........ம்....... சரி கீர்த்தி எப்படியாவது இந்த செமஸ்டரோட தொல்லைகெல்லாம் ஒரு முற்று புள்ளி வைக்கலாம்னு பார்த்தா விடமாட்ட போல" என்றாள் விஜி
"அதெல்லாம் இல்ல நான் படிக்கனும்னு தான் நினைக்கறேன்" என்றாள் கீர்த்தி
"ஆனா, பாவம் டா நீ" என்றாள் உத்ரா சோகத்தோடு
"ஏன் டி"
"பின்ன காலைல 8.00 மணிக்கு பெட் காபியோட எழுப்பினா தான் இவ எழுந்தரிப்பா, அதுமட்டும் இல்ல சுடுதண்ணி, காபி இந்த மாதிரி பெரிய வேலை மட்டும் தான் அவளுக்கு செய்ய தெரியும் , சம்பார், சாப்பாடுனு சின்ன வேலையெல்லாம் தெரியாது"
"அதுனால என்ன நான் காலைல எழுந்து காபி போட்டு அவள எழுப்பிட்டு போறேன்.. அவளுக்கு சமையல் தெரியாட்டி என்ன? நான் செஞ்சுட்டு போறேன்" என விஜியும் உத்ராவும் சேர்ந்து ஒரு கரகோஷம் எழுப்பினர்.
"இப்பவே பாதி பொண்டாடி தாசானா மாறிட்ட டா கல்யாணத்துகப்பறம் கீர்த்திதாசன் பேர மாத்திகூட வைச்சுக்குவ போல" என்றாள் விஜி
"இப்பவே அத செய்லாம்னு இருகேன்" என இருவரும் சிரிக்க கீர்த்தி அவனை முறைத்து
"போதும் போதும் ரொம்ப வழியுது" என்றாள்.
"அழகு தானே செல்லம்"
"ம்........ இது வேறயா ஆசை தான் , முகத்த கண்ணாடி பார்கறதேயில்ல போல"
"தினமும் பார்கறனே நீ மன்மதன் னு தான் சொல்லுது கண்ணாடி"
"சொன்னாங்க சொன்னாங்க"
"யாரு அந்த பக்கத்து சீட் ல உட்காருந்திருக்கே அந்த மாதவி பொண்ணு தான" என்று சுட்டிகாட்டினான்.
"ஓ ...... அதுகுள்ள பேரெல்லாம் தெரிஞ்சுகிட்டாச்சா?"
"ம்........ அந்த பொண்ணு தான் சொன்னுச்சு"
"வேறயென்ன சொன்னா அவ?"
"நான் ரொம்ப அழகு........ என்ன எப்பவும் பாத்திகிட்டே இருக்கலாம்னு சொன்னா அதுமட்டுமா எப்ப கல்யாணம் பண்ணிகலாம்னு? வேற கேட்டா சொல்லு நான் என்ன சொல்லட்டும்"
"ஏன் சரினு சொல்லுங்களேன்...... எனக்கேன்ன?" சொல்லி முடிப்பதற்குள் தொண்டை அடைக்க கண்களில் குளம்கட்டியது. அவளருகில் நெருங்கி அமர்ந்தவன்
"ஏய் சும்மா வம்பிழுத்தேன் டா இதுக்கு போய் அழலாமா?..........ம்....... கண்ண துடச்சுக்க டா....... உன்ன தவிர நான் யாரயாவது பார்பேனா "
"இல்ல பார்த்து தான் பாருக்களேன்?" என இருவரும் ஒன்று சேர்ந்து சிரித்தனர். இருவரும் நிமிர்ந்தால் விஜியையும் உத்ராவையும் காணவில்லை எங்கே போனார்கள் தேடினர் சிறிது நேரத்தில் இருவரும் ஐஸ்கிரீமுடன் வந்து சேர்ந்தனர்.
"எங்க டி போனிங்க?"
"இல்ல பா நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தீங்க அதான் நாங்க அப்படியே நடந்துட்டு வந்தோம் அப்பறம் தனியா பேசவிடறாங்களா பாருனு மனசுக்குள்ள திட்டுவீங்க எங்களுக்கு தேவையா? என்ன உத்தி"
"அதானே" என அவளும் ஆமோதிக்க சிரித்தபடி அனைவரும் வீடுவந்து சேர்ந்தனர்.
No comments:
Post a Comment