நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Friday, January 27, 2012

நான் என்பதே நீயல்லவா - 17

உத்ரா கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தை கண்ணனுக்கு சொன்னார் மல்லிகார்ஜுன்.பின் அவருக்கு ஒரு யோசனை தோன்ற விக்கியை தொலைபேசியில் தொடர்புகொண்டு காலையில் வந்து தன்னை பார்க்குமாறு தெரிவித்தார்.சரண் சென்னை திரும்பி இருந்தான், ராஜாத்தியும் பெருமாளும் முடிவை தெரிந்து கொண்டு வருவதாக சொல்லிவிட்டனர். இப்போது அவர்கள் மட்டும் சென்று பெண் பார்த்து வருவதாக முடிவாயிற்று.

காலையில் மல்லிகார்ஜுனை சந்திதான் விக்கி.

"என்ன மாமா வர சொன்னீங்க?"

"இல்ல விக்கி..... நம்ம உத்திக்கு ஒரு இடம் முடிவாகி இருக்கு......"

"அப்படியா...... நல்ல விஷயம் மாமா ... யாரு மாமா?"

"நம்ம விஜி இருக்கால அவ பெரிப்பா பையன் பேரு சரண்.....நாளைக்கு உத்திய அவங்க அப்பாவும் அம்மாவும் பாக்க வராங்க"

"ரொம்ப நல்லது மாமா.....நான் வந்துடறேன் மாமா"

"அதான் அவங்க கல்யாணத்தோட , உங்க கல்யாணத்தையும் வைச்சுகலாம்னு நினைக்கறேன் நீ என்ன பா சொல்லுற..?"

" அதில்ல மாமா .....கீர்த்தி படிப்பு முடியட்டுமே........"

"கல்யாணம் பண்ணிகிட்டு படிக்கட்டும் ...... நீ வேண்டானா சொல்ல போற......"

"இல்ல மாமா ..... அது...."

"ரெண்டு பொண்ணு கல்யாணத்தையும் ஒன்னா நடத்தி பாக்கனும் போல இருக்கு விக்கி .... ப்ளிஸ்."

"ப்ளிஸ் எல்லாம் எதுக்கு மாமா...... உங்க இஷ்டம்....." அதற்கு மேல் அவனால் மறுக்க முடியவில்லை.


அடுத்த நாள் மாலை உத்ராவை பார்க்க ராஜாத்தி,பெருமாள்,கண்ணன்,பிரபாவதி,விஜி என அனைவரும் வந்திருந்தனர்.சம்பிரதாயத்துகாக மட்டுமே இந்த பெண் பார்க்கும் படலம், ஏற்கனவே உத்ராவை பாத்திருந்ததால் ராஜாத்தி-பெருமாள் இருவருக்கும் இந்த கல்யாணத்தில் பரிபூர்ண சம்மதமே. அழகாய் பட்டு உடுத்தி , அளவான நகைகள் இட்டு, மிதமான ஒப்பனையுடன் இருந்த உத்ராவை பார்க்க அங்கிருந்த பெரியவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்தது. கீர்த்தியும், விக்கியும் இந்த உலகத்திலேயே இல்லை. அன்று கீர்த்தியும் இன்னோரு மணபெண் போல் இருக்க வைத்த கண்னை எடுக்காமல் எடுக்கமுடியாமல் அவளை பார்த்துகொண்டிருந்தான் விக்கி. இருவரும் வேறுலகில் இருந்தனர்.


உத்ராவின் கண்களோ சரணை காணாமல் தேடி கொண்டிருந்தன. அதை பார்த்த ராஜாத்தி அவளை அருகில் அழைத்து முகத்தை திருஷ்டி கழித்து

" தேவதை மாதிரி இருக்க டா...." என்று அவள் கன்னத்தை சிவக்கவைத்து விட்டு பின்

" கவலைபடாத சரண்ன நிச்சயத்தனைக்கு பார்த்துகலாம் சரியா?" என அங்கிருந்தவர்கள் அனைவரும் நகைத்தனர். ராஜாத்தி அவளின் காதருகில் சென்று

"அதுவரைக்கும் இத வைச்சுக்கோ" என்று ஒரு போட்டோவை யாருமறியாமல் அவளின் கையில் திணித்தார். அதை யாருமறியாமல் பத்திரபடுத்தினாள். அனைவரின் மனநிலை சந்தோஷ்மாக இருந்தது.

விஜியின் நிலை தான் பாவம், தோழி தனக்கு அண்ணியாய் வர போவதற்கு சந்தோஷபடுவதா, இல்லை ரிஷிக்காக வருத்தபடுவதா என்று தெரியாமல் தவித்துகொண்டிருந்தாள்.அதனை கவனித்தவள் ஒரு மர்ம புன்னகை சிந்தினாள்.

இன்றிலிருந்து பத்துநாட்கள் கழித்து நிச்சயமும், நிச்சயம் முடிந்த ஒரு வாரத்தில் கல்யாணம் என்றும் முடிவானது. சரண் வீட்டில் சரண்-உத்ரா கல்யாணத்தோடு விக்கி - கீர்த்தி கல்யாணத்தையும் வைப்பதில் ஏதேனும் ஆட்சபனை உள்ளதா? என கேட்டுகொண்டனர். அவர்களுக்கும் அதில் சந்தோஷமே என்று விட,நிச்சயத்திற்கான வேலைகளில் இறங்கினர்.

No comments: