நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Sunday, January 8, 2012

நான் என்பதே நீயல்லவா - 12

ன் நினைவுகளிலிருந்து மீண்டவள் அவர்களிருவரும் இன்னும் அப்படியே இருப்பதை பார்த்துவிட்டு இது வேலைக்காகாது(இந்த காதலிக்கறவங்க மட்டும் எப்படி தான் இப்படி உலகத்தையே மறந்துட்டு இருக்காங்களோ) என்று நினைத்தவள் மெல்ல விக்கியிடம் பேச்சு கொடுத்தாள்.

"விக்கி விஜி இன்னைக்கும் வரலயே உனக்கு இன்பார்ம் பண்ணாலா?"

"இல்ல எதுவும் சொல்ல டி, கூப்பிடவா?"

"ம் கூப்பிடேன்"

விக்கி அவளை செல்லில் அழைத்தான் சத்தம் பின் பக்கதிலிருந்து வர திரும்பினால் அங்கு விஜி அமர்ந்திருந்தாள்.அவளருகில் சென்ற உத்ரா

"ஏய் என்ன இது தனியா இங்க வந்து உக்காந்துட்ட?"

"இல்ல........ அது.......வந்து"

"என்ன டி இப்போ உடம்பு எப்படி இருக்கு?" என்றபடி தொட்டு பார்த்தாள்.அவளின் அக்கறை விஜியை என்னவோ செய்ய

"ம் சரியா போயிடுச்சு" என்றாள்.

"சரி வா அங்க போலாம்" அழைத்து சென்றாள்.

"சாரி டி அன்னைக்கு ............. எதோ கோவத்துல.........."

"விடு டி " அவள் காதில் ரகசியமாக

"இன்னைக்கு என் ஆபிஸ்க்கு வா டி உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு" என்றாள்.

"சரி"

விக்கி, கீர்த்தி, உத்தி முவரும் வளவளத்தபடி வந்தனர்.விஜி வாயே திறக்கவில்லை உத்ரா இதை கவனித்தபோதும் இன்றோடு இதற்குமுடிவு வரபோகிறது, இன்று ரிஷி இவளிடம் பேசிய பிறகு சரியாகிவிடுவாள் என்று அமைதியானாள். மாலை ரிஷியையும் விஜியையும் சந்திக்கவைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள். நினைத்ததெல்லாம் நடந்து விடுகிறதா என்ன?

விஜியின் மனநிலை வேறாக இருந்தது அவளது எண்ணம் ரிஷி உத்ராவை காதலிக்கிறான்(லூசு லூசு). தன் தோழிக்கு தன்னால் எந்த வித இடையூறும் வரகூடாது தனக்கு நிறைவேறாத காதல் தான் விரும்பியவனுக்காவது நிறைவேறட்டும் என்று நினைத்தாள்(பெரிய தியாகினு நினைப்பு மனசுக்குள்ள).ரிஷியை மட்டும் மறுபடியும் பார்க்ககூடாது என்று நினைத்திருந்தாள்.
நால்வரும் விடைபெற்று சென்றனர்.

அலுவலகத்தில் நுழைந்தவள் தன் காலை வேலைகளை முடித்துவிட்டு மணிபார்த்த போது மதியமாகிருந்தது ரிஷியை தேடினாள் அவன் அலுவலகத்தில் இல்லையென்று தெரிந்ததும் அவனது செல்லிற்கு அழைத்தாள். எடுத்தவன்

"சொல்லு உத்ரா"

"எங்கிருக்க ரிஷி?"

"பெங்களூர் ல"

"பெங்களூர் ல யா தீடிர்னு ஏன் அங்க போன?"

"அவசர வேலையாம் நம்ம ரமேஷ் attend பண்ணறதா இருந்தது அவனுக்கு தான் ஆக்சிடன்ட் ஆகி ஹாஸ்பிடல இருக்கானே அதான் வர வேண்டியதா போச்சு"

"ஒ ....... அப்படியா?"

"ஏன் என்னாச்சு?"

"இல்ல இன்னைக்கு உன்னையும் விஜியையும் மீட் பண்ண வைக்கலாம்னு நினைச்சேன்"

"அய்யோ போச்சா............. சரி சீக்கரம் வந்துடரேன் அவ எப்படி இருக்கா?"

"நல்லா இருக்கா பா கவல படாத"

"சரி சீக்கரம் வந்துடறேன்"

"சரி ..." இன்றோடு முடியும் என்று நினைத்தால் இப்படியாகிவிட்டதே என்று நினைத்தபடி செல்லை அணைத்தாள் சரி சீக்கரம் சரியாகிவிடும் அதற்குள் நாம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைத்துக்கொண்டாள்.வேலையில் கவனத்தை திருப்பினாள்.அவளுக்கு என்னவென்றால் விஜி ரிஷியை காதலிக்கிறாளா என்று உறுதிபடுத்தி ரிஷியிடம் சொல்லியாயிற்று இதற்கு மேல் காதலர்கள் இருவரும்தான் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும், காதலர்களுக்கு இடையில் நாம் செல்லகூடாது என்ற எண்ணம் அவளுக்கு.

மாலையில் விக்கி,கீர்த்தி,விஜி முவரும் உத்ராவின் அலுவலகத்துக்கு வர நால்வருமாய் சேர்ந்து ஒரு restaurant ற்கு சென்றனர்.உத்ரா ஒரு பக்கம் கீர்த்தியும் மறுபக்கம் விஜியையும் அமரவைத்துகொண்டாள்.விக்கி இவளுக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்தான்.தங்களுக்கு தேவையானவற்றை ஆர்டர் செய்துவிட்டு அன்றய தினத்தை பற்றி பேசிகொண்டிருந்தனர்.விஜி மன தடுமாற்றத்திலிருந்தும் கவலையிலிருந்து அவளது முடிவின் விளைவால் சிறிது தெளிந்திருந்தாள்.சிறிது தான் அதனால் முன் போல் இல்லாவிட்டாலும் சகஜமாகவே பேசிகொண்டிருந்தாள். எப்படி ஆரம்பிப்பது என்று சிறிது யோசித்துவிட்டு பின் மெல்ல விக்கியிடம்

"அப்பறம் எப்ப டா கல்யாணம் ?" என்றாள் உத்ரா

தீடீர் கேள்வியில் புரியாதவன் "யார் கல்யாணம்?" என்றான்.

"உன் கல்யாணம் தான் டா"

"அதுக்கு இப்ப என்ன அவசரம் ஒரு முனு வருஷம் போகடும்" கீர்த்தியை பார்த்தபடி

"அது வரைக்கும் இப்படியே நீயும் கீர்த்தியும் ஒருத்தரஒருத்தர் சைட் அடிச்சுகிட்டு இருக்க போறீங்களா?"

அவள் கேட்டதும் அங்கிருந்த முவருக்கும் அதிர்ச்சி கீர்த்திகோ பயமும் அதிர்ச்சியும் கலந்து தோன்றியது அத்தோடு உத்ராவை பார்த்தாள்.உத்ராவின் முகதில் என்ன இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.விஜி தான் முதலில் தெளிந்து அவள் காதில்

"என்ன டி இது?"

"என்ன நடக்குதுனு பாரு" மெதுவாக சொல்லிவிட்டு , சத்தமாக " ரெண்டு பேரும் காதலிக்கறாங்க யாருக்கும் தெரியாம"

"உத்ரா ............... வந்து .......நீ ......... நினைக்கறமாதிரி .......இல்ல" என்றான் விக்கி

அதற்குள் கீர்த்தி அவசரமாக " அக்கா அப்படியெல்லாம் இல்ல .... கா ப்ளிஸ் கா" என்றாள்

"எப்படி இல்ல நீ விக்கிய காதலிக்கல...."கீர்த்தியிடம் கேட்டாள்.

கீர்த்தி விக்கியை பார்க்க அவன் என்னை ஏமாற்றிவிடாதே என்பது போல் கண்களால் கெஞ்சினான். என்ன செய்வதென்று அறியாதவள் அமைதியாயிருந்தாள்.

"சொல்லு நீ இவன லவ் பண்றயா இல்லயா?" சற்று காட்டமாகவே கேட்க கீர்த்தி தலையாட்டிவிட்டு குனிந்துகொண்டாள்.

விக்கி அவளை காதலோடு பார்த்தான் பின் முடிவுக்குவந்தவனாய் உத்ராவின் கண்களை நேராய் பார்த்து

"உத்ரா இப்ப தான் அவ சொல்லுறா அவளும் என்ன லவ் பண்ணறானு, நானும் அவள நேசிக்கறேன் உயிரா நேசிக்கறேன், இப்ப தான் நாங்க எங்க love அ வெளிபடுத்தறோம், நீ நினைக்கற மாதிரி தெரியாம லவ் பண்ணறது எல்லாம் கிடையாது." சிறிது இடைவெளி விட்டு பின் "ஆனா எனக்கு மனைவினா அது கீர்த்தி மட்டும் தான் அதுவும் நீ, அத்த , மாமா சம்மதத்தோடுதான் அதுவரை நாங்க காத்துகிட்டு இருப்போம்" என்று அழுத்ததோடும் உறுதியோடும் சொன்னான் கீர்த்தியின் கண்களிலும் அதே உறுதி இருந்தது.

No comments: